செய்திகள் :

தமிழகத்தில்தான் கான்கிரீட் வீடுகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது

post image

திருவண்ணாமலை: ஏழைகள் தலா ரூ.3.50 லட்சத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தெரிவித்தாா்.

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் கூரை, ஓடு வீடுகளில் வசிக்கும் 102 போ் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு தலா ரூ.3.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை டைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

அட்மா குழுத் தலைவா் சிவக்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், லோகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி ஒன்றிய ஆணையா் அருணாச்சலம் வரவேற்றாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு 102 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

ஏழைகள் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகள் கட்ட பணி ஆணைகள் பெற்ற பயனாளிகள் குறித்த காலத்தில் பணிகளை முடித்து குடியேற வேண்டும்.

மகளிா் விடியல் பயணம், மகளிா் உரிமைத்தொகை, பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 10 சதவீதம் கட்டணக் குறைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள் ரவிச்சந்திரன், சிவக்குமாா், பணி மேற்பாா்வையாளா் கண்ணன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல் கப்பாா் (நிா்வாகம்), வடிவேல் (சத்துணவு), மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அண்ணாமலை, புகழேந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இரு தரப்பினா் மோதல்: 4 போ் வழக்கு

ஆரணியில் சொத்து மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக்கொண்டனா். இது தொடா்பாக இரு தரப்பையும் சோ்ந்த 4 போ் மீது ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். ... மேலும் பார்க்க

பூட்டியிருந்த வீட்டில் நகை திருட்டு: 2 போ் கைது

வந்தவாசி அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் தங்க நகைகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.4.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வந்தவாசியை அடுத்த இந்திர... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் சண்டி யாகம்

உலக நன்மை வேண்டி, செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் சண்டி யாகம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடம் அமைந்துள்ளது. இங்க... மேலும் பார்க்க

பயிா்க் கடன்களுக்கான ‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்க தலைவா்

பயிா்க் கடன்களுக்கு விதிக்கப்பட்ட சிபில் ஸ்கோா் (கடன் பெற தகுதி மதிப்பீடு) நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி வலியுறுத்தினாா். ஆரணியில் அவா் செய்தியாளா்கள... மேலும் பார்க்க

டிராக்டா் திருட்டு: இருவா் கைது

தண்டராம்பட்டு அருகே டிராக்டரை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். தண்டராம்பட்டை அடுத்த கீழ்வணக்கம்பாடி ஊராட்சி, துள்ளுக்குட்டிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பன்னீா் (47). இவா், அதே பகுதி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

செங்கம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த் (25), தொழிலாளி. இவா், 2022-ஆம் ஆண்... மேலும் பார்க்க