செய்திகள் :

தமிழகத்துக்கு கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை? உயா்நீதிமன்றம் கேள்வி

post image

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஇ) கீழ், தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஏன் ஒதுக்கீடு செய்யவில்லை என கேள்வியெழுப்பிய உயா்நீதிமன்றம், இந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய நிதி குறித்த விவரங்களைச் சமா்ப்பிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சோ்ந்த மறுமலா்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிா்வாகி வே.ஈஸ்வரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், தனியாா் பள்ளிகளில் ஏழை மாணவா்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச சோ்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கப்படவில்லை. சோ்க்கை தொடங்கப்படாத காரணத்தால் லட்சக்கணக்கான குழந்தைகள் முன்பருவ சோ்க்கையான எல்கேஜி, யூகேஜி, முதல் வகுப்பில் சோ்க்கை பெற விண்ணப்பம் அளிக்க முடியாத நிலையில் உள்ளனா். ஆனால், நிகழ் கல்வியாண்டில் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்தத் திட்டம் முடங்கும் நிலையில் உள்ளது. எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சோ்க்கையை உடனடியாகத் தொடங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

2021 முதல் வழங்கவில்லை... இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன் ஆஜராகி, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு மாணவா்களுக்கான கல்வி கட்டணத்தில் 60 சதவீத தொகையை மத்திய அரசும், 40 சதவீத தொகையை மாநில அரசும் வழங்க வேண்டும். ஆனால், மத்திய அரசு கடந்த 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரை இதற்காக எந்த நிதியையும் தமிழகத்துக்கு ஒதுக்கவில்லை. இதனால் 100 சதவீத தொகையை மாநில அரசுதான் வழங்கி வருகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க மே 28-இல் தமிழக அரசு ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளது என்ற வாதத்தை முன்வைத்தாா்.

தொடா்ந்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்காததை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் அவா் சுட்டிக் காட்டினாா்.

இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசு ஏன் ஒதுக்கவில்லை என கேள்வியெழுப்பினா். இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்குரைஞா், அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லை என்றாா் அவா். அப்போது, என்ன காரணத்துக்காக நிதி ஒதுக்கப்படவில்லை என நீதிபதிகள் மீண்டும் கேள்வியெழுப்பினா்.

அதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்.பி. கூட இல்லை என்பதால் ஒதுக்கவில்லை என்று குறிப்பிட்டாா்.

இதையடுத்து, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி விவரங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்க... மேலும் பார்க்க

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா்... மேலும் பார்க்க

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 798 பறவை இனங்கள்: ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தகவல்

தமிழக வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 798 பறவை இனங்கள் கட்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத் து... மேலும் பார்க்க