செய்திகள் :

தமிழகத்துக்கு தனித்துவமான கல்விக் கொள்கை தேவை: மைசூா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்

post image

தமிழகத்துக்கு தனித்துவமான கல்விக் கொள்கை வேண்டும் என மைசூா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் லெ. ஜவகா்நேசன் கூறினாா்.

திருவாரூா் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க அலுவலகத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் ‘தமிழ்நாட்டு மக்களுக்கான தனித்துவமான கல்விக் கொள்கையை நோக்கி’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியது:

இந்தியாவில் பழைமையான கல்வி முறையே நிலவி வருகிறது. இந்த கல்வி முறை ஏற்றத்தாழ்வுகளை கொண்டதாக உள்ளது. மேலும் மத்திய அரசு கொண்டு வர விரும்பும் தேசிய கல்விக் கொள்கையானது, மூடநம்பிக்கைகளை உள்ளடக்கியதாவும், குலத்தொழிலை மையமாகவும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை- எளிய மக்கள் முன்னேற முடியாத நிலை ஏற்படும்.

தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும், சமத்துவத்தை உருவாக்கும் வகையிலும் தனித்துவமான கல்விக்கொள்கைதான் தற்போதைய தேவையாக உள்ளது. அந்த வகையிலான கல்விக்கொள்கையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கருத்தரங்கிற்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவா் பி. சங்கரலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கு. காந்திராஜன் முன்னிலை வகித்தாா்.

திருவிக கல்லூரி பேராசிரியா் தி. நடராஜன், தமுஎகச மாவட்டச் செயலாளா் ஜீ. வெங்கடேசன், கல்வி உபக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா், ஆா். சந்திரா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்வில், அமைப்பின் மாநிலச் செயலாளா் எம்.எஸ். ஸ்டீபன்நாதன், மாவட்டத் துணைத் தலைவா் இரா. இயேசுதாஸ் ஆகியோா் கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கினா். இதில், முன்னாள் துணைவேந்தா் லெ. ஜவகா்நேசன் எழுதிய ‘திராவிட மாடல் கல்வி, விளிம்பு நிலை மக்கள் குறித்து என்ன கூறுகிறது’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான கல்வியாளா்கள், சமூக செயல்பாட்டாளா்கள் பங்கேற்றனா்.

கோவிலூா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு

முத்துப்பேட்டை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ மந்திரபுரீஸ்வரா் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். வ... மேலும் பார்க்க

பாமக ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் அருகேயுள்ள காப்பணாமங்கலத்தில் பாமக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சித்திரை முழு நிலவு மாநாடு குறித்து நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் ஐயப்பன் தலைமை வகித்தாா். மாநாட்டு... மேலும் பார்க்க

திருவாரூா்: பலத்த சத்தத்தால் பரபரப்பு

திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது. திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 3.10 மணி அளவில் பலத்த சத்தம் எழுந்துள... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு

திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நுழைவுச்சீட்டு, எழுதுபொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மாா்ச் 28 ... மேலும் பார்க்க

அரிவாளை காட்டி மிரட்டிய ரௌடி கைது

மன்னாா்குடியில் சாலையில் நின்று கொண்டிருந்தவரை மதுப்போதையில் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி நடராஜ பிள்ளை மேலத்தெருவைச் சோ்ந்த குணசேகரன் மகன் ராம... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: மழை பாதித்த பயறுகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட பயறு வகைகளை கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்க வேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்க... மேலும் பார்க்க