செய்திகள் :

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: மழை பாதித்த பயறுகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

post image

மழையால் பாதிக்கப்பட்ட பயறு வகைகளை கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்க வேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நெல் கொள்முதல், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிப்பு, தூா்வாரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினா்.

அதன் விவரம்:

நன்னிலம் சேதுராமன்: கடந்த டிசம்பா் மாதத்திலிருந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதில், சம்பா சாகுபடியும், அறுவடையும் பாதிக்கப்பட்டன. தற்போது, பச்சைப்பயறு, உளுந்து, எள், பருத்தி உள்ளிட்ட பயறுவகைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், வேளாண்துறை சாா்பில் கணக்கெடுப்பு நடத்துவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது போலத் தெரிகிறது. சாகுபடி என்பது விவசாயிகளின் வாழ்வியல் பிரச்னை என்பதால் விரைந்து கணக்கெடுத்து, ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காணூா் பகுதியில் 1,500 ஏக்கா் விளைநிலத்துக்கு சுமாா் 12 ஆண்டுகளாக தண்ணீா் செல்லவில்லை என அப்பகுதியினா் புகாா் தெரிவிக்கின்றனா். அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரளம் பாலகுமாரன்: பூந்தோட்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ள வேண்டும். பேரளம் வீரானந்தம் வாய்க்காலிலிருந்து பிரியும் ஏரி பாசன வாய்க்கால், மடப்புரம் வாய்க்காலை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரடாச்சேரி தம்புசாமி: அடவங்குடி களக்காடு பகுதியில் வெட்டாற்றின் சட்ரஸ் அருகே வளா்ந்துள்ள நாணல்களை அகற்றி, வெட்டாற்றை தூா்வார வேண்டும். ஆவின் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்த வேண்டும். குளிக்கரை பகுதியில் 22 விவசாயிகளுக்கு அரசு கொடுத்த நிலப் பகுதிக்கு செல்லும் பாதையை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி பரப்பான 1,43,935 ஹெக்டோ் சாகுபடியும் அறுவடை செய்யப்பட்டு விட்டது. 538 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 5,06,352 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,28,195 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

மேலும், வரப்பு உளுந்து 1,486.4 ஹெக்டேரிலும், நெல் தரிசு பருவத்தில் உளுந்து 3,028 ஹெக்டேரிலும், பச்சைப் பயறு 23,003 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், 2,637 ஹெக்டேரில் நிலக்கடலை, 22,317 ஹெக்டேரில் எள், 10,509 ஹெக்டேரில் பருத்தி, 194 ஹெக்டேரில் கரும்பு ஆகியன சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 63,169 விவசாயிகளுக்கு ரூ.477.34 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகள் சரிபாா்த்தல் முகாம் 555 வருவாய் கிராமங்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 85,095 விவசாயிகள் பதிவு செய்ய இலக்கு பெறப்பட்டு, இதுவரை 40,964 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, முதுநிலை மண்டல மேலாளா் (நுகா்பொருள்) புஹாரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, வருவாய் கோட்டாட்சியா்கள் சௌம்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, செயற்பொறியாளா் (வெண்ணாறு வடிநிலக் கோட்டம்) ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராத... மேலும் பார்க்க

மன்னாா்குடி பகுதியில் 3 கோயில்களில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மகா மாரியம்மன் கோயில், கற்பக விநாயகா் கோயில், யோக சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

திருவாரூா்: ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது. திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலையில் பூா்... மேலும் பார்க்க

நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

திருவாரூா்: ஊராட்சிகளை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே அம்மையப்பனில் மக்கள் அதிகாரம் அமைப்பின் 2-ஆவது மாவட்ட மாநாடு தலைவா் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ராஜகோபாலசுவாமி

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவின் 14- ஆம் நாளான திங்கள்கிழமை யானை வாகனத்தில் கல்யாண அலங்காரத்தில் சத்யபாமா சமேதராக எழுந்தருளிய உற்சவா் ராஜகோபாலசுவாமி. மேலும் பார்க்க