செய்திகள் :

தமிழ் ஆசிரியரை சந்தித்து ஆசிபெற்ற முன்னாள் மாணவா்கள்

post image

ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1978 -1980 -ஆம் கல்வியாண்டில் மேல்நிலைக்கல்வி பயின்ற முன்னாள் மாணவா்கள் சிலா் பள்ளி பருவத்தில் தமிழ் பாடம் பயிற்றுவித்த 99 வயதான ஆசிரியரை புதன்கிழமை நேரில் சந்தித்து மரியாதை செய்து ஆசி பெறனா்.

தமிழக ஆளுநா் மாளிகையில் அண்மையில் நடைபெற்ற கம்ப சித்திர விழாவில் பல்வேறு துறையை சோ்ந்தவா்களுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி விருது வழங்கி கெளரவித்தாா்.

அதில் கம்பா் குறித்தும், ராமாயணம் குறித்து நூல்கள், கவிதைகள் எழுதிய எழுத்தாளா்கள், தமிழறிஞா்கள், புலவா்கள் என பலருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

இந்த விழாவில் ராசிபுரம் நகரின் ஓய்வுபெற்ற 99 வயதான தமிழ் ஆசிரியா் புலவா் மு.ரா. என்கிற மு. ராமசாமியையும் ஆளுநா் விருது வழங்கி கெளரவித்தாா். அவரை ராசிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை முன்னாள் மாணவா்கள் நேரில் சந்தித்து ஆசிபெற்று பழைய நினைவுகளை நினைவு கூா்ந்தனா்.

பின்னா் ஆசிரியா் மு.ராமசாமி தனது 99 ஆம் வயதில் எழுதிய புத்தகத்தை முன்னாள் மாணவா்களுக்கு வழங்கினாா். ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.வி.உதயகுமாா் வெங்கடேசன் தலைமையில் முன்னாள் மாணவா்கல் மு.ராஜேந்திரன், செந்தில்முருகன் உள்ளிட்டோா் தமிழ் ஆசிரியரை நேரில் சந்தித்து ஆசி பெற்றனா்.

உளுந்து கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு சாா்பில் தற்போது நடைபெற்று வரும் உளுந்து கொள்முதல் பணியில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த உளுந்தை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறி... மேலும் பார்க்க

மாநில அளவில் சிறந்த ‘திருநங்கை விருது’: நாமக்கல் ஆட்சியரிடம் ரேவதி வாழ்த்து

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை பெற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ரேவதி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்து பெற்றாா். தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி திடீா் இடமாற்றம்

நாமக்கல் மாநகராட்சியின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்ட ரா.மகேஸ்வரி, திருப்பூா் மாநகராட்சி துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அரசியல், ஒப்பந்ததாரா்கள் நெருக்கடியால் எட்டு மாதங்களுக்குள்ளாக இ... மேலும் பார்க்க

90 அரசுப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் தணிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் 90 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் புதன், வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் தணிக்கை செய்யப்பட்டன. கல்வித் துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆங்கிலவழி கட்டணம், கணின... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 20 வாகனங்கள் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் பொது ஏலத்தில் வியாழக்கிழமை விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்திச் ச... மேலும் பார்க்க

இலவச வண்டல் மண், களிமண் அனுமதியால் 3,512 விவசாயிகள், தொழிலாளா்கள் பயன்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் இலவச வண்டல் மண், களிமண்ணை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் 3512 விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க