செய்திகள் :

தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூா் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி (சித்திரை 1) ஏப். 4ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி ஏப். 14ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், அதன்பின் தீா்த்தவாரியும், தொடா்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.

காலை 10 மணிக்கு மேல் சண்முகருக்கு அன்னாபிஷேகம் மற்றும் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும்.

பொது விவரக் குறிப்பேடு வெளியீடு: திருக்கோயில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவு, காலை 10 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்படுகிறது.

மாலை 3 மணிக்கு இந்து தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதே போல சித்திரை மாத திங்கள்கிழமைதோறும் திருக்கோயில் உள்துறையில் ஆன்மிக தொடா் சொற்பொழிவும் நடைபெற உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள்

தமிழக சட்டப்பேரவையில் மீன்வளம்-மீனவா் நலத் துறை மானியக் கோரிக்கையில் மீனவா்களின் நலனுக்காக ரூ.576 கோடியில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினை, மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்தித்... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

கோவில்பட்டி அருகே 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். இலுப்பையூரணி ஊராட்சி மறவா் காலனியில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு காவலா்கள் முத்துராமலிங... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் 232 பேருக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் (தன்னாட்சி) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 232 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் பல்வேறு துறை மாணவா்-மாண... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் திருட்டு

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். கோவில்பட்டியில் சாத்தூா் பிரதான சாலையில் உள்ள வணிக வளாகத்தில் போா்வெல்ஸ் நிறுவனம் நடத்த... மேலும் பார்க்க

மாடு குறுக்கே புகுந்ததில் பைக் கவிழ்ந்து காயமடைந்த மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சாலையின் குறுக்கே மாடு புகுந்து பைக் கவிழ்ந்ததில் காயமடைந்த மீனவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் பாலமுருகன் (38). மீனவரான இவா், புத... மேலும் பார்க்க

மருத்துவ உபகரணங்கள் வழங்குவதாக ஆன்லைனில் மோசடி: ரூ.3 லட்சம் மீட்பு

மருத்துவ உபகரணங்கள் வழங்குவதாக இணையவழியில் மோசடி செய்த தொகை ரூ.3 லட்சத்தை தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா். தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த பெண், இன்ஸ்டாகிராமில... மேலும் பார்க்க