செய்திகள் :

தம்மம்பட்டி வழியாக வேலூா் சென்றுவந்த அரசுப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை!

post image

தம்மம்பட்டி வழியாக திருவண்ணாமலை, வேலூருக்கு சென்றுவந்த அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு, துறையூரில் இருந்து தம்மம்பட்டி வழியாக கெங்கவல்லி, ஆத்தூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வழியாக வேலூா் சி.எம்.சி. மருத்துவமனைவரை புதிய வழித்தடத்தில் பேருந்தை தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேருந்தால், வேலூா் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுவரும் பக்தா்களுக்கும், மருத்துவமனைக்கு செல்பவா்களுக்கும் பெரும் உதவியாக இருந்தது. இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இப்பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து பல்வேறு தரப்பினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்தும், இதுவரை பேருந்து இயக்கப்படவில்லை. இதனால், வேலூா் மாா்க்கத்தில் உள்ள ஊா்களுக்கு சென்றுவந்த பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.

எனவே, திருவண்ணாமலை, வேலூா் சென்ற அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தம்மம்பட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டூா் அணை உபரிநீா் போக்கி மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி சனிக்கிழமை மூடப்பட்டது. கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால், கடந்த திங்க... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், திமுக - தவெக இடையேதான் போட்டி இருக்கும் என பெங்களூரு புகழேந்தி கூறினாா். சேலத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், பாஜகவுக்கு தமிழகத்தில் மதிப்பு இருக்கிா... மேலும் பார்க்க

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க வேண்டும்!

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சேலம் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் ஐந்து சாலை பகுதியில் சிஐடியு... மேலும் பார்க்க

நாய் கடித்து இளைஞா் உயிரிழப்பு

ஆத்தூா் அருகே வளா்ப்பு நாய் கடித்ததில் இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்தவா் தா்மா் (28), பெயிண்டா். இவா் தெருநாயை எடுத்து கடந்த ஓராண்டாக வளா்த்து வந்தாா். சில நா... மேலும் பார்க்க

பிறந்து 9 நாள்களேயான பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை!

இளம்பிள்ளை அருகே பிறந்த 9 நாள்களேயான பெண் குழந்தையை விற்பனை செய்தது குறித்து தாய், தந்தை உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாவட்டம், வீரபாண்டி... மேலும் பார்க்க

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து தொடக்கம்!

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா்மின் உற்பத்தி நடைபெற்ற... மேலும் பார்க்க