செய்திகள் :

தவக்கோலம்...

post image

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட தக்கோலம் அருள்மிகு கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை அருள்மிகு ஜலநாதீஸ்வரர் கோயிலில், தமிழ்நாட்டில் உள்ள மூன்றாவது குரு பரிகாரத் தலமாகும்.

புராண வரலாற்றுடன் தேவாரப் பதிகம் பெற்று திகழும் திருவூரல் எனப்படும் தக்கோலத்தில் உள்ள இந்தக் கோயிலில் கோஷ்ட மூர்த்தங்களில் அபூர்வ "உத்கடிக' ஆசனத்தில் வீற்றிருந்து அருள்புரியும் தட்சிணாமூர்த்தி சிறப்புமிக்கவர். வலது காலை தொங்கவிட்டு, இடது காலை குத்துக்காலிட்டு வலது கீழ் கை சின்முத்திரையுடன் மேல் கை ஜபமாலையைத் தாங்கி, இடதுகீழ்கை புத்தக ஏடு தாங்கியும் மேல் கை அக்னி ஜூவாலையுடனும் காலின் கீழ் நாகம், மான்களுடன் சற்றே தலையைச் சாய்த்துகொண்டு புன்னகை தவழும் திருமுகத்துடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் அபூர்வ திருக்கோலமாகும்.

"இங்கு வழிபடுவோருக்கு ஞானம், அறிவு, பேறுகள் நல்குகிறார். உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் மேன்மை அடைய வைக்கிறார். வழக்குகளில் வெற்றியை அளிக்கிறார். வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தச் சந்நிதியில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டைக் கடலை மாலை அணிவித்து, 14 தீபவிளக்குகள் ஏற்றி வழிபட்டால் வேண்டிய பலன் நிச்சயம் கிடைக்கும்' என்பது பக்தர்களின் நம்பிக்கை.

"எக்கோலம் போனாலும் தக்கோலம் போய்வா' என்ற சொல்வழக்கு இங்கு நிலவுகிறது.

- ஜி.சுப்பு

திருமணம் கைகூட...!

சோழ நாட்டின் பாடல் பெற்ற எதிர்கொள்பாடி என்கிற மேலைத் திருமணஞ்சேரி தலம், காவிரியின் வடகரைத் தலங்களில் 24-ஆவது தலம்."சிவனின் சாபத்தால் பசுவாக மாறிய அன்னை பார்வதி தேரழுந்தூரில் வழிபட்டாள். பிறகு திருக்கோ... மேலும் பார்க்க

பலன் தரும் பாலைத்துறை பரிமளம்

பாலை நிலமும், மரமும் உண்டு. கும்பகோணம் } தஞ்சாவூர் வழியில், "திருப்பாலைத்துறை' என்ற ஊரின் தல மரம் பாலை மரமே ஆகும்! துறை என்பது நீர்நிலைகளில் இறங்கிப் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள இடமாகும். திருமுற... மேலும் பார்க்க

சூரியன் வழிபடும் கோயில்

சிவகங்கையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் இலுப்பை, பனை மரங்கள் அடர்ந்த பகுதியில் வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயில் உள்ளது. 350 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் வீற்ற... மேலும் பார்க்க

கண் கோளாறு நீக்கும் தலம்...

ராஜராஜ சோழனின் பட்டத்து அரசி லோக மகாதேவியின் பெயரில் "உலகமகாதேவிபுரம்' என அழைக்கப்பட்ட ஊரின் பெயர் மருவி, தற்போது "உலகாபுரம்' எனப்படுகிறது. ஓய்மா நாட்டு தனி ஊராகத் திகழ்ந்த இங்கு சிவ-விஷ்ணு கோயில்கள் ... மேலும் பார்க்க