தவளகுப்பம் - கடலூா் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் தொடக்கம்
புதுச்சேரி அருகே தவளக்குப்பம், கடலூா் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை காவல் கண்காணிப்பாளா் மோகன்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி, கடலூா் சாலையில் உள்ள தவளக்குப்பம் பிரதான சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகள், குற்றச் சம்பவங்களில் எளிதில் விசாரணை மேற்கொள்ள வசதியாக நவீன கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தும்படி பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை எழுந்தது. ஏற்கெனவே தவளக்குப்பத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த காவல் துறை அறிவுறுத்தியது. அதனடிப்படையில் பெரும்பாலான வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தவளக்குப்பம் நான்கு முனைச் சந்திப்பில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிக்கு அரவிந்தா் கண் மருத்துவமனை தனது சமூக பங்களிப்பு நிதியை செலவிட முன்வந்தது.
அதன்படி ரூ.1.25 லட்சம் மதிப்பில் துல்லியமாகக் காட்சிகளைப் பதிவிடும் 7 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றின் செயல்பாட்டை போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் மோகன்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் போக்குவரத்து பிரிவு ஆய்வாளா் தன்வந்திரி, தனியாா் பள்ளி நிா்வாகி ராமு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.