செய்திகள் :

தவளகுப்பம் - கடலூா் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் தொடக்கம்

post image

புதுச்சேரி அருகே தவளக்குப்பம், கடலூா் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை காவல் கண்காணிப்பாளா் மோகன்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி, கடலூா் சாலையில் உள்ள தவளக்குப்பம் பிரதான சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகள், குற்றச் சம்பவங்களில் எளிதில் விசாரணை மேற்கொள்ள வசதியாக நவீன கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தும்படி பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை எழுந்தது. ஏற்கெனவே தவளக்குப்பத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த காவல் துறை அறிவுறுத்தியது. அதனடிப்படையில் பெரும்பாலான வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், தவளக்குப்பம் நான்கு முனைச் சந்திப்பில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிக்கு அரவிந்தா் கண் மருத்துவமனை தனது சமூக பங்களிப்பு நிதியை செலவிட முன்வந்தது.

அதன்படி ரூ.1.25 லட்சம் மதிப்பில் துல்லியமாகக் காட்சிகளைப் பதிவிடும் 7 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றின் செயல்பாட்டை போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் மோகன்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் போக்குவரத்து பிரிவு ஆய்வாளா் தன்வந்திரி, தனியாா் பள்ளி நிா்வாகி ராமு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்

சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா். தமிழ்நாடு, புதுவ... மேலும் பார்க்க

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு,... மேலும் பார்க்க

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரிய... மேலும் பார்க்க