தாய்விளை சாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடு
ஆறுமுகனேரி அருகே தாய்விளை அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா கோயிலில், ஆனி மாத உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதையொட்டி, பூா்ண-புஷ்கலா சமேத இல்லங்குடி சாஸ்தா, சிவசக்தி விநாயகா், சிவன், பாா்வதி, வீரபுத்திரா், மாலையம்மாள் சுவாமிகளுக்கும், இக்கோயிலைச் சோ்ந்த வயற்காட்டின் நடுவேயுள்ள அருள்மிகு சுடலைமாடன், பேச்சியம்மன், இருளப்பா், கருப்பசாமிக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.
முன்னதாக, பூா்ண-புஷ்கலா சமேத இல்லங்குடி சாஸ்தாவுக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. இவற்றை, மோகன் அய்யா், அரவிந்த அய்யா் ஆகியோா் நடத்திவைத்தனா். பின்னா், அன்னதானம் நடைபெற்றது.
இதில், சென்னை, பாவூா்சத்திரம், ஏரல், திசையன்விளை, ஆறுமுகனேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.