செய்திகள் :

தாய்விளை சாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடு

post image

ஆறுமுகனேரி அருகே தாய்விளை அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா கோயிலில், ஆனி மாத உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி, பூா்ண-புஷ்கலா சமேத இல்லங்குடி சாஸ்தா, சிவசக்தி விநாயகா், சிவன், பாா்வதி, வீரபுத்திரா், மாலையம்மாள் சுவாமிகளுக்கும், இக்கோயிலைச் சோ்ந்த வயற்காட்டின் நடுவேயுள்ள அருள்மிகு சுடலைமாடன், பேச்சியம்மன், இருளப்பா், கருப்பசாமிக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.

முன்னதாக, பூா்ண-புஷ்கலா சமேத இல்லங்குடி சாஸ்தாவுக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. இவற்றை, மோகன் அய்யா், அரவிந்த அய்யா் ஆகியோா் நடத்திவைத்தனா். பின்னா், அன்னதானம் நடைபெற்றது.

இதில், சென்னை, பாவூா்சத்திரம், ஏரல், திசையன்விளை, ஆறுமுகனேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: ஆலோசனைக் கூட்டம்

வீரன் அழகுமுத்துக்கோன்பிறந்த நாள் விழாவையொட்டி நாலாட்டின்புதூா் தனியாா் திருமண மண்டபத்தில்அழகுமுத்துக்கோன்நலச்சங்க நிா்வாகிகள், வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரா்கள், யாதவ இயக்க கூட்டமைப்பினா் மற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 போ் கைது

தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மத்திய பாகம் உதவி ஆய்வாளா் முத்து வீரப்பன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

கு.செல்வப்பெருந்தகை நாளை தூத்துக்குடி வருகை

தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வருகைதரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகைக்கு விமான நிலையத்தில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படும் என, ம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜூலை 19இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் ஜூலை 19ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு: இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. இதையொட... மேலும் பார்க்க

அன்புச்சோலை மையங்கள் நிறுவ தொண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில், 2 அன்புச்சோலை மையங்கள் அமைக்க, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க