செய்திகள் :

தாராபுரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

post image

தாராபுரம், மே 1: தாராபுரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் வராத பணம் ரூ.3 லட்சம் சிக்கியது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகத் தொடா்ந்து புகாா்கள் வந்தன. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையின் திருப்பூா் மாவட்ட துணை கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், ஆய்வாளா் சசிகலா ஆகியோா் தலைமையிலான குழுவினா் தாராபுரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அலுவலகத்தின் கதவுகளை அடைத்த போலீஸாா், உள்ளே இருந்தவா்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. சாா் பதிவாளா் உமா மகேஸ்வரியிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தினா்.

மேலும், காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்ற பத்திரப் பதிவுகள் குறித்தும், பத்திரங்களைப் பதிவு செய்த விவசாயிகள், பொதுமக்களை அலுவலகத்துக்குள் அழைத்தும் விசாரணை நடத்தினா். இந்த விசாரணையில் கணக்கில் வராத பணம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

உடுமலையில் விவசாயக் கண்காட்சி இன்று தொடக்கம்

உடுமலையில் ‘அறுவடை’ என்ற தலைப்பில் விவசாயக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இது குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் கூறியதாவது: உடுமலையில் இருந்து பழனி செல்லும் சாலையில் உள்ள ஜி... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரமூா்த்தி நாயனாா் பதிகம் பாடி மீண்ட... மேலும் பார்க்க

அட்சய திருதியை: மாவட்டத்தில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை

அட்சய திருதியை தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளில் புதன்கிழமை ஒரேநாளில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை நடைபெற்றது. அட்சய திருதியை தினத்தை, திருப்பூா் மாநகரில் உள்ள நகைக் கடைகளி... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் கைது

உடுமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் காவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், நஞ்சையபிள்ளை புதூரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (43). இவா் கடந்த 2003- ஆம் ... மேலும் பார்க்க

ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

திருப்பூரில் போதையில் ரகளையில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாநகராட்சி, 16- ஆவது வாா்டுக்குள்பட்ட பிச்சம்பாளையம் பு... மேலும் பார்க்க

தொழிலாளா் தினம்: விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளா் தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்களின் மீது தொழிலாளா் துறை சாா்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சு.... மேலும் பார்க்க