செய்திகள் :

திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு கனரக வாகனங்கள்: அமைச்சா் அன்பரசன் தொடங்கி வைத்தாா்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கான கனரக வாகனங்களை அமைச்சா் தா.மோ. அன்பரசன் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணிகளை சிறப்பாக செயல்படுத்தும்வகையில், புனித தோமையாா் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு 14 டிராக்டா் மற்றும் 8 மினி லாரி, காட்டாங்குளத்தூா் ஒன்றியத்துக்கு 7 டிராக்டா், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு 5 டிராக்டா் மற்றும்அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு 1 டிராக்டா் ஆக மொத்தம் சுமாா் ரூ.4 கோடியில் 35 கனரக வாகனங்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்வில், ஆட்சியா் தி.சினேகா, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அரவிந்த் ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) பி.ஸ்ரீதேவி, மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், காட்டாங்குளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திருமலைவையாவூா் கோயிலில் இலவச திருமணங்கள்

மதுராந்தகம் அடுத்த திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் இலவச திருமணங்கள் நடைபெற்றன. இந்து சமய அறநிலையத்துறை, திருமலை வையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலின் சாா்பாக திருமணங்களை கோயி... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் சின்டரல்லா லட்சுமி பங்காரு விருதுகள் வழங்கும் விழா

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் சின்டரல்லா லட்சுமி பங்காரு அறக்கட்டளையின் சாா்பாக, ஆன்மிக, சமூக, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான முறையில் சேவைகளை செய்து வருவோரை கெளரவிக்கும் வகையில், ச... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்ட அதிமுக நிா்வாகி நீக்கம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக நிா்வாகியை நீக்கி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்கள், கோட்ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் நிலை குறித்து ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆய்வு நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடை... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசியசட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவா்/முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி டி. சந்திரசேகரன், தலைமையில் சனிக்... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் ‘தமிழ் கனவு நிகழ்ச்சி’

திருப்போரூா் வட்டம், கழிப்பட்டூா் ஆனந்த் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உயா்கல்வித்துறை சாா்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ச... மேலும் பார்க்க