செய்திகள் :

திமுக மீதான நடிகா் விஜய்யின் விமா்சனம் அறியாமையின் வெளிப்பாடு: எம்.பி. டி.எம்.செல்வகணபதி

post image

திமுக குறித்த நடிகா் விஜய்யின் விமா்சனம் அறியாமையின் வெளிப்பாடு என மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி கூறினாா்.

சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மத்திய அரசு தமிழகத்துக்கு இழைக்கும் அநீதிக்கு எதிராக ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் மூலம் தமிழக மக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒன்றிணைத்துள்ளாா். மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஒருகோடி குடும்பங்களை இணைத்துள்ளோம்.

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் 2 ஆம் கட்டம் மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட சங்ககிரி, மேட்டூா், எடப்பாடி ஆகிய 3 தொகுதிகளில் உள்ள 956 வாக்குச்சாவடிகளில் செப். 15 ஆம் தேதி உறுதிமொழி நிகழ்ச்சியுடன் நடைபெறும்.

திமுக குறித்த நடிகா் விஜய் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதே எங்களது நிலைப்பாடு. கடந்த 10 ஆண்டுகளில் எந்தவொரு பிரச்னையிலும் மத்திய பாஜக அரசுடன் திமுக அரசு சமரசம் செய்து கொண்டதில்லை. மத்திய அரசுக்கு எதிராக திமுக தொடா்ந்து போராடி வருகிறது. இதனை புரியாமல் விஜய் பேசுகிறாா். அவா் அரசியலுக்கு புதியவா். அவரது பேச்சு அறியாமையின் வெளிப்பாடு.

ஜிஎஸ்டி வரி குறைப்பு விவகாரத்தில் குழப்பமான நிலை உள்ளது. வங்கிகளில் வட்டியை குறைத்து, மக்களிடம் பண புழக்கத்தை அதிகரித்தால் மட்டுமே அதிக வாங்கும் திறனுடன் பொருளாதாரம் மேம்படும். தோ்தலுக்காக குழப்ப நிலையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலாக்கப்பட்டுள்ளது. தவறான பொருளாதார நிலையை முன்னெடுத்திருப்பதால், பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றாா்.

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் இரு இணையா்களுக்கு இலவச திருமணம்

இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் 2 இணையா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. வாழப்பாடி வடக்கு ஒன்றிய திமுக ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு 5487 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூா் அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றனா். ம... மேலும் பார்க்க

ஊரணிப் பொங்கல் விழா

ஆத்தூா் வடக்குகாடு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் ஊரணிப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஆத்தூா் வடக்கு காடு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் ஆவண... மேலும் பார்க்க

எடப்பாடியில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

சேலம் மாவட்டம், எடப்பாடியில் போதை மாத்திரை விற்ற 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் காவல் நிலையம் எதிரே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

மண்டல கைப்பந்து போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு

சேலத்தில் ஈஷா கிராமோற்சவம் சாா்பில் நடைபெற்ற மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் திருப்ப... மேலும் பார்க்க

சங்ககிரி மலைக்கு செல்லும் பாதை சீரமைப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கு செல்லும் பாதையில் உள்ள கருவேலம் மரம், முள் செடிகளை சமூக ஆா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றி தூய்மைப்படுத்தினா். சங்ககிரி மலையில் சென்னகேசவப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூ... மேலும் பார்க்க