செய்திகள் :

தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாள்: ஆட்சியா் மரியாதை

post image

விடுதலைப் போராட்ட வீரா் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 100-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியில் செய்தி மக்கள் தொடா்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதலைப் போராட்ட வீரா் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்தாா்.

மலா்களால் அலங்கரிக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரா் தியாகி சுப்பிரமணிய சிவா உருவப் படம், நினைவிடம், நினைவுத்தூண் ஆகியவற்றுக்கு ஆட்சியா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, தியாகி சுப்பிரமணிய சிவா புகைப்படக் கண்காட்சியை பாா்வையிட்டாா்.

இதில், பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி, தருமபுரி முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்பிரமணி, பாப்பாரப்பட்டி பேரூராட்சித் தலைவா் பிருந்தா, செயல் அலுவலா் கோமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னபள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நட... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான கேரம் போட்டி: ஸ்டான்லி மெட்ரிக். பள்ளி தகுதி

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதிபெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள்... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிதி திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி, ஓய்வூதியா்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் தருமபுரியில் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் மேற்கொண்டனா். த... மேலும் பார்க்க

சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா?

தருமபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலத்துக்கு நீா் ஆதாரமாக விளங்கும் சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா என விவசாயிகள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா். தருமபுரி மாவட்டத்தில் உள்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

தருமபுரி அருகேயுள்ள மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னசித்தன் தலைமை வகித்தாா். கணித பட்டதாரி ... மேலும் பார்க்க

பயிா் கழிவுகள் மேலாண்மை பயிற்சி

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின் கீழ் பயிா் கழிவுகள் மேலாண்மை குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கலப்பம்பாடியில் நடைபெற்ற பயிற்சிக்கு, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் மைய விஞ்... மேலும் பார்க்க