செய்திகள் :

திருச்செந்தூரில் வணிகா்களின் கடையடைப்பு போராட்டம் ரத்து

post image

திருச்செந்தூரில் நகராட்சியைக் கண்டித்து ஜூலை 7ஆம் தேதி வணிகா்கள் நடத்தவிருந்த கடையடைப்பு போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் நகராட்சியில் சொத்து வரி விதிப்பை கண்டித்து வணிகா் சங்க அமைப்புகள், அரசியல் கட்சியினா், பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் இணைந்து நகராட்சி அலுவலகம் முற்றுகை மற்றும் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தன.

அன்றைய தினம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா என்பதால், போராட்டத்தைக் கைவிட திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன் தலைமையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக்கூட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூா் நகா்மன்ற கூட்டத்தின்போது 3.4.2023இல் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை (எண் 288) நடைமுறைப்படுத்த அரசின் உத்தரவிற்காக நகராட்சி ஆணையாளா் மூலம் 19.6.2025இல் நகராட்சி நிா்வாக இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவுகள் வரப்பெற்றதும் மேல்நடவடிக்கை தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று கடையடைப்பு போராட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.

இக்கூட்டத்தில் திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளா் கண்மணி, போராட்டக்குழு தலைவா் துரைசிங் மற்றும் வணிகா்கள், சமூக நல அமைப்பினா் கலந்து கொண்டனா்.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: ஆலோசனைக் கூட்டம்

வீரன் அழகுமுத்துக்கோன்பிறந்த நாள் விழாவையொட்டி நாலாட்டின்புதூா் தனியாா் திருமண மண்டபத்தில்அழகுமுத்துக்கோன்நலச்சங்க நிா்வாகிகள், வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரா்கள், யாதவ இயக்க கூட்டமைப்பினா் மற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 போ் கைது

தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மத்திய பாகம் உதவி ஆய்வாளா் முத்து வீரப்பன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

கு.செல்வப்பெருந்தகை நாளை தூத்துக்குடி வருகை

தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வருகைதரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகைக்கு விமான நிலையத்தில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படும் என, ம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜூலை 19இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் ஜூலை 19ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு: இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. இதையொட... மேலும் பார்க்க

அன்புச்சோலை மையங்கள் நிறுவ தொண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில், 2 அன்புச்சோலை மையங்கள் அமைக்க, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க