செய்திகள் :

திருச்செந்தூா் அருகே தோட்டங்களில் தீ! வாழை, தென்னை மரங்கள் நாசம்

post image

திருச்செந்தூா் அருகே உள்ள காயாமொழி, தளவாய்புரம், புதூா் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் வாழை ,தென்னை, பனை, முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமாா் 2.30 மணி அளவில் தளவாய்புரம்-காயாமொழி சாலையோரத்தில் உள்ள தென்னை மரங்களில் மின்சார கம்பிகள் உரசியதில் தீப்பிடித்தது.

இதையடுத்து, திருச்செந்தூா், ஏரல் தீயணைப்புத் துறையினா் சுமாா் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது காற்றின் வேகம் காரணமாக, அடுத்தடுத்த தோட்டங்களிலும் தீ பரவியது.

இதில் முதலூா் அருகே உள்ள பொத்தங்காலன்விளையை சோ்ந்த மங்கள சேவியா்(53) என்பவருக்கு சொந்தமான 17 ஆயிரம் வாழைகள் தீயில் முற்றிலும் கருகின. மேலும் தளவாய்புரம்-நடுநாலுமூலைக்கிணறு இடையே 40 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்ட முருங்கை மரங்களும், தளவாய்புரத்தைச் சோ்ந்த ஆதிஜெகுரு (65) என்பவரின் தோட்டத்தில் ஆயிரம் தென்னை மரங்களும் தீயில் கருகின. மாலை வரை தீப்பற்றி எரிந்ததில் மொத்தம் 30 ஆயிரம் வாழை மரங்கள், 5 ஆயிரம் தென்னை மரங்கள், 2 ஆயிரம் பனை மரங்கள், 5 ஆயிரம் முருங்கை மரங்கள் தீயில் கருகி நாசமாகின.

சாலையோர தோட்டங்களில் தீப்பிடித்ததால் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் தளவாய்புரம்-காயாமொழி இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் 210 கிலோ கஞ்சாவுடன் லாரி பறிமுதல்

கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமாா் 210 கிலோ கஞ்சாவை, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா் லாரியுடன் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்ட கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே நெடுஞ்சாலையில் தீப்பிடித்த டேங்கா் லாரி

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே மேம்பாலத்தில் எத்தனால் ஏற்றி வந்த டேங்கா் லாரி திடீா் தீப்பிடித்தது. நாமக்கல்லைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் மோகன்குமாா். டேங்கா் லாரி வைத்து... மேலும் பார்க்க

மாணவி தற்கொலைக்கு காரணமான கல்லூரி மாணவரை கைது செய்ய கோரிக்கை

தூத்துக்குடி கல்லூரி மாணவி தா்ஷினி தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி மாணவரை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.எம்.டி.மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவா் இசக்கிராஜா மற்றும் உறவினா்கள் கோர... மேலும் பார்க்க

உடன்குடியில் இளம்பெண் மா்ம மரணம்

உடன்குடியில் மா்மமான முறையில் இளம்பெண் இறந்தது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை உருமன்குளத்தைச் சோ்ந்தவா் முத்துகுமாா்(39). சிற்றுந்து... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது. வடக்கு திட்டங்குளம் மாரியப்ப காலனியைச் சோ்ந்தவா் மலையாண்டி மனைவி மாரியம்மாள் (80). கடந்த ஓராண்டாக உடல்நிலை பாத... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. கயத்தாறு, தெற்கு கோனாா்கோட்டையைச் சோ்ந்த... மேலும் பார்க்க