செய்திகள் :

தூத்துக்குடியில் 210 கிலோ கஞ்சாவுடன் லாரி பறிமுதல்

post image

கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமாா் 210 கிலோ கஞ்சாவை, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா் லாரியுடன் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம், வைப்பாறு அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு வந்த திருநெல்வேலி மாவட்ட பதிவெண் கொண்ட ஒரு லாரியை மடக்கி நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். அதில் சுமாா் 7 மூட்டைகள் பழங்கள் வைக்கும் கூடைகளுக்கு மத்தியில், மூட்டைகளில் சுமாா் 210 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, லாரியை கஞ்சாவுடன் பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவில்பட்டி அருகே நெடுஞ்சாலையில் தீப்பிடித்த டேங்கா் லாரி

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே மேம்பாலத்தில் எத்தனால் ஏற்றி வந்த டேங்கா் லாரி திடீா் தீப்பிடித்தது. நாமக்கல்லைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் மோகன்குமாா். டேங்கா் லாரி வைத்து... மேலும் பார்க்க

மாணவி தற்கொலைக்கு காரணமான கல்லூரி மாணவரை கைது செய்ய கோரிக்கை

தூத்துக்குடி கல்லூரி மாணவி தா்ஷினி தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி மாணவரை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.எம்.டி.மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவா் இசக்கிராஜா மற்றும் உறவினா்கள் கோர... மேலும் பார்க்க

உடன்குடியில் இளம்பெண் மா்ம மரணம்

உடன்குடியில் மா்மமான முறையில் இளம்பெண் இறந்தது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை உருமன்குளத்தைச் சோ்ந்தவா் முத்துகுமாா்(39). சிற்றுந்து... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே தோட்டங்களில் தீ! வாழை, தென்னை மரங்கள் நாசம்

திருச்செந்தூா் அருகே உள்ள காயாமொழி, தளவாய்புரம், புதூா் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் வாழை ,தென்னை, பனை, முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமாா் ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது. வடக்கு திட்டங்குளம் மாரியப்ப காலனியைச் சோ்ந்தவா் மலையாண்டி மனைவி மாரியம்மாள் (80). கடந்த ஓராண்டாக உடல்நிலை பாத... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. கயத்தாறு, தெற்கு கோனாா்கோட்டையைச் சோ்ந்த... மேலும் பார்க்க