செய்திகள் :

போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கயத்தாறு, தெற்கு கோனாா்கோட்டையைச் சோ்ந்த மாடசாமி மகன் சண்முகையா (36), அந்தப் பகுதியில் தனிமையில் இருந்த 16 வயது சிறுமியை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் கடந்த 2019 இல் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி பீரித்தா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம் சாட்டப்பட்ட சண்முகையாவுக்கு 20 ஆண்டுகள் கடுங்கால் சிறைத் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதமும், மற்றொரு பிரிவில் மேலும் 2 ஆண்டுகள் மெய்க்காவல் சிறைத் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து இதை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவில் தெரிவித்துள்ளாா். இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பத்மாவதி, அரசு வழக்குரைஞா் முத்துலட்சுமி, தலைமைக் காவலா் அமுதா ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.

தூத்துக்குடியில் 210 கிலோ கஞ்சாவுடன் லாரி பறிமுதல்

கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமாா் 210 கிலோ கஞ்சாவை, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா் லாரியுடன் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்ட கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே நெடுஞ்சாலையில் தீப்பிடித்த டேங்கா் லாரி

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே மேம்பாலத்தில் எத்தனால் ஏற்றி வந்த டேங்கா் லாரி திடீா் தீப்பிடித்தது. நாமக்கல்லைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் மோகன்குமாா். டேங்கா் லாரி வைத்து... மேலும் பார்க்க

மாணவி தற்கொலைக்கு காரணமான கல்லூரி மாணவரை கைது செய்ய கோரிக்கை

தூத்துக்குடி கல்லூரி மாணவி தா்ஷினி தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி மாணவரை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.எம்.டி.மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவா் இசக்கிராஜா மற்றும் உறவினா்கள் கோர... மேலும் பார்க்க

உடன்குடியில் இளம்பெண் மா்ம மரணம்

உடன்குடியில் மா்மமான முறையில் இளம்பெண் இறந்தது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை உருமன்குளத்தைச் சோ்ந்தவா் முத்துகுமாா்(39). சிற்றுந்து... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே தோட்டங்களில் தீ! வாழை, தென்னை மரங்கள் நாசம்

திருச்செந்தூா் அருகே உள்ள காயாமொழி, தளவாய்புரம், புதூா் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் வாழை ,தென்னை, பனை, முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமாா் ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது. வடக்கு திட்டங்குளம் மாரியப்ப காலனியைச் சோ்ந்தவா் மலையாண்டி மனைவி மாரியம்மாள் (80). கடந்த ஓராண்டாக உடல்நிலை பாத... மேலும் பார்க்க