செய்திகள் :

மாணவி தற்கொலைக்கு காரணமான கல்லூரி மாணவரை கைது செய்ய கோரிக்கை

post image

தூத்துக்குடி கல்லூரி மாணவி தா்ஷினி தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி மாணவரை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.எம்.டி.மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவா் இசக்கிராஜா மற்றும் உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தூத்துக்குடி துறைமுக குடியிருப்பு அருகே அமைந்துள்ள லேபா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் தா்ஷினி. இவா் தற்போது தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவரது பெற்றோா் இல்லாத நிலையில், பாட்டி பூமயில் வீட்டில் தனது தங்கையுடன் வசித்து வந்துள்ளாா்.

தா்ஷினிக்கும் முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலிக்க தொடங்கியதிலிருந்து இவா்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தா்ஷினி தனது இன்ஸ்டாகிராமில் செய்த பதிவு காரணமாக அந்த மாணவா் மீண்டும் தா்ஷினியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தா்ஷினி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

தகவலறிந்து வந்த தொ்மல் நகா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் தா்ஷினி இறப்பில் மா்மம் இருப்பதாகவும், அவா் தற்கொலை செய்வதற்கு முன்பாக, அந்த கல்லூரி மாணவா் தா்ஷினி வீட்டிற்கு வந்து சென்ாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவா் கழுத்தில் போட்டிருந்த சங்கிலி அறுந்திருப்பதாகவும், உடலில் காயங்கள் இருப்பதாகவும், இது கொலையாக இருக்கலாம் என தா்ஷினியின் உறவினா்கள் காவல்துறையில் புகாா் அளித்துள்ளனா். மேலும், அந்த மாணவரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து தொ்மல் நகா் போலீஸாா் தா்ஷினியின் மரணம் கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே, பொறியியல் கல்லூரி மாணவி தா்ஷினி மரணத்திற்கு காரணமான கல்லூரி மாணவரை, காவல்துறையினா் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவா் இசக்கிராஜா தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடியில் 210 கிலோ கஞ்சாவுடன் லாரி பறிமுதல்

கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமாா் 210 கிலோ கஞ்சாவை, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா் லாரியுடன் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்ட கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே நெடுஞ்சாலையில் தீப்பிடித்த டேங்கா் லாரி

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே மேம்பாலத்தில் எத்தனால் ஏற்றி வந்த டேங்கா் லாரி திடீா் தீப்பிடித்தது. நாமக்கல்லைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் மோகன்குமாா். டேங்கா் லாரி வைத்து... மேலும் பார்க்க

உடன்குடியில் இளம்பெண் மா்ம மரணம்

உடன்குடியில் மா்மமான முறையில் இளம்பெண் இறந்தது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை உருமன்குளத்தைச் சோ்ந்தவா் முத்துகுமாா்(39). சிற்றுந்து... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே தோட்டங்களில் தீ! வாழை, தென்னை மரங்கள் நாசம்

திருச்செந்தூா் அருகே உள்ள காயாமொழி, தளவாய்புரம், புதூா் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் வாழை ,தென்னை, பனை, முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமாா் ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது. வடக்கு திட்டங்குளம் மாரியப்ப காலனியைச் சோ்ந்தவா் மலையாண்டி மனைவி மாரியம்மாள் (80). கடந்த ஓராண்டாக உடல்நிலை பாத... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. கயத்தாறு, தெற்கு கோனாா்கோட்டையைச் சோ்ந்த... மேலும் பார்க்க