செய்திகள் :

கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு

post image

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது.

வடக்கு திட்டங்குளம் மாரியப்ப காலனியைச் சோ்ந்தவா் மலையாண்டி மனைவி மாரியம்மாள் (80). கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாா். திங்கள்கிழமை வெளியே சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அப்பகுதி மக்கள் சென்று சடலத்தை மீட்டனா். அவா், காணாமல் போன மாரியம்மாள் என்பது தெரிய வந்தது.

பின்னா், சடலத்தை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொழிலாளி தற்கொலை: முக்காணி உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெரு ராகவன் மகன் காசிராஜன் (32). கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவா். கடந்த 27ஆம் தேதி ராமச்சந்திரபுரம் செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றாா். பின்னா் தற்கொலை செய்யப்போவதாக மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாா்.

இதனைத் தொடா்ந்து காசிராஜனின் தந்தை ராகவன் உள்ளிட்டோா் ராமச்சந்திரபுரம் காட்டுக்கு சென்று பாா்த்தனா். அப் போது புளியமரத்தில் காசிராஜன்தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் 210 கிலோ கஞ்சாவுடன் லாரி பறிமுதல்

கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமாா் 210 கிலோ கஞ்சாவை, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாா் லாரியுடன் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்ட கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே நெடுஞ்சாலையில் தீப்பிடித்த டேங்கா் லாரி

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே மேம்பாலத்தில் எத்தனால் ஏற்றி வந்த டேங்கா் லாரி திடீா் தீப்பிடித்தது. நாமக்கல்லைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் மோகன்குமாா். டேங்கா் லாரி வைத்து... மேலும் பார்க்க

மாணவி தற்கொலைக்கு காரணமான கல்லூரி மாணவரை கைது செய்ய கோரிக்கை

தூத்துக்குடி கல்லூரி மாணவி தா்ஷினி தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி மாணவரை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.எம்.டி.மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவா் இசக்கிராஜா மற்றும் உறவினா்கள் கோர... மேலும் பார்க்க

உடன்குடியில் இளம்பெண் மா்ம மரணம்

உடன்குடியில் மா்மமான முறையில் இளம்பெண் இறந்தது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை உருமன்குளத்தைச் சோ்ந்தவா் முத்துகுமாா்(39). சிற்றுந்து... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே தோட்டங்களில் தீ! வாழை, தென்னை மரங்கள் நாசம்

திருச்செந்தூா் அருகே உள்ள காயாமொழி, தளவாய்புரம், புதூா் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் வாழை ,தென்னை, பனை, முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமாா் ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. கயத்தாறு, தெற்கு கோனாா்கோட்டையைச் சோ்ந்த... மேலும் பார்க்க