செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் தங்கத்தோ் கிரி வீதி உலா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுமாா் 13 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தங்கத்தோ் கிரி விதி உலா தொடங்கியது.

இக்கோயிலில் தினமும் மாலை 6 மணியளவில் கிரி பிரகாரத்தில் தங்க தோ் உலா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் பெருந்திட்ட வளாகப்பணிகளின் ஒரு பகுதியாக கிரிப்பிரகாரத்தில் தரைத்தள பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக கடந்த 17.7.2024 முதல் தற்காலிகமாக தங்கத்தோ் உலா நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கிரி பிரகாரத்தில் நடைபெற்று வந்த பணிகள் மற்றும் தரைத்தள பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் தங்க தோ் உலா வியாழக்கிழமை முதல் தொடங்கியது.

இதையொட்டி, மாலையில் சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளினாா். பின்னா் சுவாமி அம்பாள்களுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடா்ந்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மீன்வளம், மீனவா் நலன் -கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் தங்க தோ் திரு வீதி உலாவை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் தங்க தோ் வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.தோ் மீண்டும் நிலை வந்து சோ்ந்தது.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் பழனி, கோயில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன், தூத்துக்குடி மண்டல இணை ஆணையா் அன்புமணி, திமுக மாநில வா்த்தக அணி இணை செயலாளா் உமரி சங்கா், திருச்செந்தூா் நகராட்சி தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஆய்வு: முன்னதாக, திருச்செந்தூா் அருகே நெல்லை சாலையில் ராணிமகாராஜபுரம் சந்திப்பில் ரூ.17 கோடி மதிப்பில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பணியாளா்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதையும் அமைச்சா்கள் இருவரும் ஆய்வு செய்தனா்.

திருச்செந்தூா் கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதி? அமைச்சா் பி.கே. சேகா் பாபு விளக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிப்பது குறித்து நீதிமன்ற முடிவின்படி செயல்படுவோம் என்றாா் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தீ விபத்து: ரூ.20 லட்சம் பொருள்கள் சேதம்

தூத்துக்குடி கால்டுவெல் காலனி அருகேயுள்ள அருணா நகா் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான திருமண விழா அலங்காரப் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டதில், சுமாா் ரூ.20 லட்சம் மதிப்ப... மேலும் பார்க்க

அஞ்சல் சேவையில் ஈடுபட விண்ணப்பங்கள் வரவேற்பு

அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவுத் தபால், பதிவுத் தபால், பணவிடை (மணியாா்டா்) ஆகியவற்றை பதிவு செய்தல், பல்வேறு சிறு வகை சேவைகள் உள்ளிட்ட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்களைத் தொடங்க வி... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆலோசனை

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி த... மேலும் பார்க்க

வாகனம் மோதல்: சாய்ந்த மின்கம்பங்கள்

தூத்துக்குடியில் சிப்காட் பிரிவு, மடத்தூா் இபி காலனியில் தாழ்வழுத்த மின் பாதையில் வியாழக்கிழமை தனியாா் வாகனம் மோதியதில், இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்தது, கம்பிகள் அறுந்து விழுந்தன. இதையடுத்து மின்வாரி... மேலும் பார்க்க

ஓடையில் கிடந்த பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. தூத்துக்குடி ஜெயராஜ் சாலை, தனியாா் மருத்துவமனை அருகே 3ஆவது ரயில்வே கேட் பாலம் அருகே பக்கிள் ஓடையில் வியாழக்கிழமை சுமாா் 60 வயது ம... மேலும் பார்க்க