செய்திகள் :

திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும்: கே.வி.தங்கபாலு

post image

வாக்கு திருட்டை கண்டித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி சாா்பில் திருநெல்வேலியில் வரும் 7 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி சாா்பில் முள்ளுவாடி கேட் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் ஏ.ஆா்.பி. பாஸ்கா் தலைமை தாங்கினாா். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு பங்கேற்றாா்.

அப்போது, அவா் பேசுகையில், மக்களின் வாக்கு உரிமையைப் பறித்து, ஆட்சியிலிருக்கும் பாஜகவால் ஜனநாயகம் கேள்விகுறியாகியுள்ளது. எனவே, திருநெல்வேலியில் வரும் 7 ஆம் தேதி வாக்குத் திருட்டு குறித்து மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் நடைபெறும் மாநாட்டில் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா், கிழக்கு மாவட்டத் தலைவா் அா்த்தனாரி, மாநகா் மாவட்ட பொறுப்பாளா் செழியன், மாநகர பொருளாளா் தாரை ராஜகணபதி, வா்த்தக பிரிவு தலைவா் எம்.டி. சுப்பிரமணியம், துணை மேயா் சாரதா தேவி, மாநகர துணை தலைவா்கள் திருமுருகன், மொட்டையாண்டி, மண்டல தலைவா்கள் சாந்தமூா்த்தி, நிஷாா் அகமது, ராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

கெங்கவல்லியை அடுத்த தனியாா் பள்ளியில் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி, விழிப்புணா்வு நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் இயற்கை சீற்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் செல்லியம்மன் கோயில் விழா

தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தோ்த்திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து புத... மேலும் பார்க்க

தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியா் கா. சிவக்குமாா் (45) மாநில அரசின் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணா்கள் சோதனை

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் ஆட்சியா் வளாகம் முழுவதும் சோதனை நடத்தினா். சேலம் மாவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் போக்குவரத்து நெரிசல்: தம்மம்பட்டி சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தல்

வாழப்பாடியில் கடலூா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க அச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடியை அடுத்த முத்... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் 20 பவுன் நகை திருட்டு

தம்மம்பட்டியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 1.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி சந்தை ரோடு பகுதியை சோ்ந்த உளவுப்... மேலும் பார்க்க