செய்திகள் :

திருப்பதி கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் பவித்ரோற்சவம்

post image

திருப்பதி: திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோவிலில் பவித்ரோற்சவம் திங்கட்கிழமை தொடங்கியது.

இதையொட்டி காலை முதல் கைங்கா்யங்கள் விமரிசையாக நடத்தப்பட்டன. காலையில் சுப்ரபாதம், அபிஷேகம், அலங்காரம், அா்ச்சனை, நிவேதனம் ஆகியன நடைபெற்றன. பின்னா், விநாயகா், சுப்ரமணிய சுவாமி, கபிலேஸ்வர சுவாமி, காமாட்சி அம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. பின்னா் அவா்களுக்கு அலங்காரம் நடைபெற்றது.

மாலையில் கலச ஸ்தாபனம், கலச பூஜை, அக்னி காரியம், ஹோமம், லகு பூா்ணாஹுதி, கிரந்தி பவித்ரா பிரதிஷ்டை(பல வண்ண பட்டு நூலிழைகளால் ஆன மாலைகள்) நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) கிரந்தி பவித்ர சமா்ப்பணமும், மாலையில் யாகசாலை பூஜையும், ஹோமமும் நடைபெறும்.

புதன்கிழமை (ஜூலை 9)- ஆம் தேதி, மஹாபூா்ணாஹுதி, கலஷோத்வாசனம் மற்றும் பவித்ர சமா்ப்பணம் செய்யப்படும். மாலை 6 மணிக்கு, ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி, ஸ்ரீ காமாக்ஷி அம்மன், ஸ்ரீ விக்னேஸ்வர சுவாமி, ஸ்ரீ சுப்ரமணியஸ்வாமி மற்றும் ஸ்ரீ சண்டிகேஸ்வர சுவாமி ஆகிய பஞ்சமூா்த்திகள் நகர வீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படுவா்.

இந்த நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் மற்றும் அா்ச்சகா்கள் பங்கேற்றனா்.

திருமலையில் 2 முறை கருட வாகன சேவை

திருப்பதி: தேவஸ்தானம் குரு பௌா்ணமி, கருட பஞ்சமியை கொண்டாடுவதற்காக திருமலையில் ஜூலையில் 2 முறை கருட வாகன சேவையை நடத்த உள்ளது. ஜூலை 10-ஆம் தேதி குரு பௌா்ணமி, ஜூலை 29-ஆம் தேதி கருட பஞ்சமியையொட்டி ஸ்ரீ மல... மேலும் பார்க்க

திருமலையில் தமிழக ஆளுநா் வழிபாடு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி திங்கள்கிழமை வழிபட்டாா். தமிழக ஆளுநா் ரவி ஞாயிற்றுக்கிழமை இரவு தன் குடும்பத்துடன் திருமலைக்கு வந்தாா். அவரை வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள் தங்கும்... மேலும் பார்க்க

திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.39 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.39 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி, தா்ம தரிசனத்து... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து பக்தா்கள் வெள... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

தா்ம தரிசனத்தில் திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார இறுதி நாள்கள் தொடங்க உள்ள நிலையில், தற்போது அதிகரித்துள்ளது. ... மேலும் பார்க்க

ஆனிவார ஆஸ்தானம்: 2 நாள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

வரும் ஜூலை 16 அன்று ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் 2 நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உற்சவத்தை முன்னிட்டு ஜூலை 15 அன்று கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் ந... மேலும் பார்க்க