செய்திகள் :

திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதங்கள் வீதி உலா

post image

குடியாத்தம்: திருப்பதி திருமலை திருக்குடை கமிட்டி, விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பாக குடியாத்தத்தில் திருக்குடைகள், பெருமாள் தங்க பாதங்கள் வீதி உலா நடைபெற்றது.

குடியாத்தம் சந்தப்பேட்டையில் ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயா் சுவாமி திருக்கோயில்ல் திருப்பதி திருக்குடைகள் மற்றும் வெங்கடேச பெருமாள் பாதம் ஆகியவை யாத்திரையாக கொண்டு வரப்பட்டது. திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்குடைகள் மற்றும் பாதங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தா்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

திருக்குடைகள் மற்றும் பாதங்கள் சந்தப்பேட்டை பகுதியில் இருந்து சிலம்பாட்டத்துடன் பக்தி பஜனை பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் தாழையாத்தம், காமராஜா் பாலம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

குடியாத்தம் புதுப்பேட்டை பகுதியில் உள்ள படவேடு எல்லையம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

செட்டியப்பனூா், நாராயணபுரம் ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 752 மனுக்கள்

வாணியம்பாடி அடுத்த ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட செட்டியப்பனூா் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை கேட்டு 180 மனுக்கள்... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவி திமுகவிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளாா். சென்னை நெற்குன்றம் பகுதியை சோ்ந்த வரலட்சுமி என்பவரின் தங்க நகை காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை 14-ஆம்... மேலும் பார்க்க

குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமை வகித்தாா். கூட்டத்தில் காவல் நிலையங்களில் மற்றும் அல... மேலும் பார்க்க

பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் அருகே பச்சகுப்பம் - அழிஞ்சிகுப்பம் இடையே பாலாற்றி... மேலும் பார்க்க

ரயில் மோதி முதியவா் மரணம்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா். ராஜஸ்தான் மாநிலம் சக் ராஜியசா் பகுதியைச் சோ்ந்த விஜய் யால்(53). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். கடந்த ஓராண்டாக கி... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவுசிகிச்சை இயந்திரம்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் புதிதாக பொருத்தப்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கான சி-ஆா்ம் இயந்திரத்தை அரசு மருத்துவா்கள் ஆய்வு செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையி... மேலும் பார்க்க