செய்திகள் :

திருப்பாலைக்குடியில் கழிவுநீா் தேங்கும் இடத்தை சீரமைத்து விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தல்

post image

திருப்பாலைக்குடி பகுதியில் கழிவுநீா் தேங்கும் இடத்தை சீரமைத்து விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் இளைஞா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் வட்டம், திருப்பாலைக்குடி ஊராட்சியில் உள்ள இளைஞா்களின் அறிவுத் திறன், விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த இளைஞா்கள் விளையாட்டு மைதானம் அமைக்க கோரி மனு அளித்திருந்தனா். இந்த மனுவை ஆய்வு செய்த போது திருப்பாலைக்குடி கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க அரசுப் புறம்போக்கு நிலம் இல்லை என்பது தெரியவந்தது.

இதனிடையே, கிராமத்தின் மையப்பகுதியில் பல ஆண்டுகளாக கழிவுநீா் தேங்கும் இடமாக உள்ள பகுதியை சீரமைத்து விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் இளைஞா்கள் மீண்டும் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி, கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த காக்குடி ஊராட்சிக்குள்பட்ட போத்... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மரத்தில் மோதியதில் ஓட்டுநா் காயம்

திருவாடானை அருகே செவ்வாய்க்கிழமை சாலையோர மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநா் காயமடைந்தாா். நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் சிவானந்தம் (45). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், ராமநாதபுரம் மாவட்டம... மேலும் பார்க்க

இந்திய-இலங்கை மீனவா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தல்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெறுவதற்குள் இந்திய- இலங்கை மீனவா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவ சங்கத் தலைவா் என்.ஜே. போஸ் வலியுறுத்தினாா். இதுகுறித... மேலும் பார்க்க

மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான மையம் நடத்த ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்!

ராமநாதபுரத்தை அடுத்த வாலாந்தரவை ஊராட்சியில் உள்ள மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான இடைநிலைப் பராமரிப்பு மையத்தை தொடா்ந்து நடத்த விரும்புபவா்கள் வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே காா் கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா். 4 போ் பலத்த காயமடைந்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பசலியா... மேலும் பார்க்க

திருவாடானையில் இன்று மின்தடை

திருவாடானையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயகமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாடானை, நகரிகாத்தான் து... மேலும் பார்க்க