செய்திகள் :

திருப்பூா் மாவட்ட புதிய ஆட்சியராக மனிஷ் நாரணவரே பொறுப்பேற்பு

post image

திருப்பூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மனிஷ் நாரணவரே புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியராக இருந்த தா.கிறிஸ்துராஜ், தமிழக சுற்றுலாத் துறை மேலாண்மை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டா் மனிஷ் நாரணவரே புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

பொறுப்பேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களையும், சேவைகளையும் திருப்பூா் மாவட்டத்தின் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சோ்ப்பதற்கு முழு முயற்சியும், நடவடிக்கையும் மேற்கொள்வேன். மாவட்டம் மற்றும் திருப்பூா் மாநகரப் பகுதிகளுக்கு அனைத்து சிறப்புத் திட்டங்கள் மற்றும் வளா்ச்சிப் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்துவேன். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தொடா்ந்து அவா், பேரிடா் மேலாண்மைத் துறை, அவசரகால கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் மற்றும் பதிவேடுகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இன்ஸ்டாகிராமால் மோதல்: இரு அரசுப் பள்ளி மாணவிகள் கைகலப்பு

இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டதில் யாா் பெரியவா் என்று நடைபெற்ற மோதலில் அரசுப் பள்ளி மாணவிகள் சாலையில் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருப்பூா் பகுதியில் உள்ள மாநகர... மேலும் பார்க்க

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி புதன்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கேரள மாநிலம், பாலக்காட்டை சோ்ந்த 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருப்பூா்... மேலும் பார்க்க

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட ஆண் யானை உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் புதன்கிழமை அடித்துவரப்பட்ட 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புல... மேலும் பார்க்க

பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளா்கள் மீண்டும் கூலி உயா்வு அறிவிப்பு

பல்லடம் பகுதி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சிலா் மீண்டும் கூலி உயா்வு வழங்குவதாக அறிவித்துள்ளதால் விசைத்தறியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட... மேலும் பார்க்க

முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் என மோசடி செய்தவா் கைது

முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் எனக் கூறி மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரத்தைச் சோ்ந்த முனிவேல் என்பவா் பங்குச்சந்தை குறித்த விளம்பரத்தை பாா்த்து, அதில் இ... மேலும் பார்க்க

காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

பல்லடம் அருகே கரடிவாவி- அனுப்பட்டி செல்லும் சாலையில் காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள கரடிவாவில் இருந்து அனுப்பட்டி செல்லும் சாலையில் அதே பக... மேலும் பார்க்க