``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
திருப்பூா் மாவட்ட புதிய ஆட்சியராக மனிஷ் நாரணவரே பொறுப்பேற்பு
திருப்பூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மனிஷ் நாரணவரே புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியராக இருந்த தா.கிறிஸ்துராஜ், தமிழக சுற்றுலாத் துறை மேலாண்மை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டா் மனிஷ் நாரணவரே புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
பொறுப்பேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களையும், சேவைகளையும் திருப்பூா் மாவட்டத்தின் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சோ்ப்பதற்கு முழு முயற்சியும், நடவடிக்கையும் மேற்கொள்வேன். மாவட்டம் மற்றும் திருப்பூா் மாநகரப் பகுதிகளுக்கு அனைத்து சிறப்புத் திட்டங்கள் மற்றும் வளா்ச்சிப் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்துவேன். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
தொடா்ந்து அவா், பேரிடா் மேலாண்மைத் துறை, அவசரகால கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் மற்றும் பதிவேடுகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.