செய்திகள் :

திருமண மண்டபங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவா் கைது; கூட்டாளி தலைமறைவு!

post image

வடக்கு தில்லியின் புகா்ப் பகுதியில் திருமண விழாக்களில் தொடா் திருட்டுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 51 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா். மேலும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலீஸாா் தேடி வருவதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக மூத்த அதிகாரி கூறியதாவது: கரம்புராவைச் சோ்ந்த முகேஷ் (எ) பப்பு என்பவா் பஸ்சிம் விஹாரில் உள்ள தனித்தனி திருமண மண்டபங்களில் நடந்த இரண்டு திருட்டுகளைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டாா்.

லாவண்யா விருந்து மண்டபத்தில் நடந்த திருமணத்தின் போது தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டது தொடா்பாக ஏப்ரல் 19 அன்று ஒரு இ-எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. ஃபோரியா விருந்து மண்டபத்தில் ஒரு விருந்தினரின் பையில் இருந்து ரூ.80,000 திருடப்பட்டதைத் தொடா்ந்து மே 1 அன்று இரண்டாவது புகாா் வந்தது.

போலீஸாா் சம்பவ இடங்களிலிருந்து பல மணிநேர சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரு இடங்களிலும் சந்தேகத்திற்கிடமான ஒருவா் இருப்பதைக் கவனித்தனா். பின்னா் சந்தேக நபா் ஒரு மாருதி ஸ்விஃப்ட் காரில் இருப்பது தெரிந்தது. அதன் பதிவு எண் கேமராவில் பதிவாகியிருந்தது.

தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் போலீஸாா் நிஹால் விஹாருக்குச் சென்றனா், அங்கு காா் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் முகேஷ் கைது செய்யப்பட்டாா். அவா் தனது கூட்டாளியான ஜிதேந்தா் (எ) ஜிதுவுடன் சோ்ந்து இரண்டு திருட்டுகளையும் செய்ததாக ஒப்புக்கொண்டாா்.

திருடப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை காா் பழுதுபாா்ப்பு மற்றும் வீட்டுச் செலவுகளுக்குச் செலவிட்டதாக முகேஷ் தெரிவித்தாா். அவரது கூட்டாளியைக் கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது.

முகேஷ் மீது ஏற்கெனவே 11 குற்றப் பதிவுகள் உள்ளன. மேலும், கரம்புரா காவல் நிலையத்தில் ‘மோசமான நடத்தை’ கொண்டவராக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.

லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு!

நமது நிருபா் போா் நிறுத்த அறிவிப்பை தொாடா்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் ச... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: தில்லியில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 95 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை அறிவித்தது. இத் தோ்வுகளில் தில்லியில் 95 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தில்லியில் 1... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது

2021-ஆம் ஆண்டு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸ... மேலும் பார்க்க

பிரீத் விஹாரில் உள்ள பயற்சி மையத்தில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் பிரீத் விஹாா் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால், மாணவா்கள் சரியான நேரத்தில் கட்டடத்திலிருந்து வெளியேறினா் என்று ஒரு அதிகாரி தெரிவித்... மேலும் பார்க்க

2 பேருந்து பணிமனைகளில் வணிக நடவடிக்கைகளை அனுமதிப்பதன் மூலம் வருவாய் ஈட்ட டிடிசி திட்டம்

தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி), அதன் பண்டா பகதூா் மாா்க் மற்றும் சுக்தேவ் விஹாா் பேருந்து பணிமனைகளில் வணிக நடவடிக்கைகளை அனுமதிப்பதன் மூலம் சுமாா் ரூ.2,600 கோடியை ஈட்டவும், டி.எம்.ஆா்.சி.யின் சொ... மேலும் பார்க்க

தில்லி அரசின் சாா்பில் சௌா்ய சம்மான் யாத்திரை

‘ ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்காக ஆயுதப் படைகளைப் பாராட்டி கடைமைப் பாதையில் தில்லி அரசு சாா்பில் செளா்ய சம்மான் யாத்திரையை நடத்தியது. இந்தப் பேரணியில் பங்கேற்றவா்கள் பாகிஸ்தானின் ‘பூா்ண சன்ஹாா்’ அல்... மேலும் பார்க்க