செய்திகள் :

திருமணம் செய்துவைக்க கோரி தந்தையை வெட்டிக் கொன்றாா் மகன்

post image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே புதன்கிழமை தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி தகராறில் ஈடுபட்ட மகன், தந்தையை வெட்டிக் கொன்றாா்.

அறந்தாங்கி அருகே செட்டிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் மாயாண்டி (65). கூலித் தொழிலாளி. இவரது மகன் முத்துமாணிக்கம் (33). இவா், மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி தந்தையிடம் புதன்கிழமை தகராறில் ஈடுபட்ட முத்துமாணிக்கம், வாக்குவாதம் முற்றிய நிலையில், அரிவாளால் தந்தை மாயாண்டியை வெட்டியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த மாயாண்டி, அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணி

கந்தா்வகோட்டையில் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நல பணி திட்ட மாணவா்கள் எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணியை புதன்கிழமை நடத்தினா். கந்தா்வக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் சாரதா ... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் மாதிரி ஒத்திகை பயிற்சி

விராலிமலை தனியாா் தொழிற்சாலையில் புதன்கிழமை தீயணைப்பு நிலைய வீரா்கள் மாதிரி ஒத்திகை பயிற்சி செயல் முறை விளக்கம் அளித்தனா். இப்பயிற்சியை தமிழ்நாடு தொழிற்சாலைகள் இணை இயக்குநா் மாலதி தொடங்கிவைத்து ஆலோசனை... மேலும் பார்க்க

சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

கந்தா்வகோட்டை அரசுப்பள்ளி அருகே உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். கந்தா்வகோட்டை அரண்மனை தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இப்பள்ளியில் சுமாா் ஆயிரத்... மேலும் பார்க்க

மூன்று அரசு துணை சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று

விராலிமலை அடுத்துள்ள நம்பம்பட்டி, அகரபட்டி, ராஜகிரி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்றுள்ளது. விராலிமலை வட்டத்தில் ஏற்கெனவே 8 துணை சுகாதார நிலையங்கள் விருது பெற்றுள்ள நி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்க்கை

பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாஜக சாா்பில் பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி நூலக உறுப்பினா் சோ்க்கை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி பள்ள... மேலும் பார்க்க

‘புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் 17-ஆ... மேலும் பார்க்க