செய்திகள் :

திருவண்ணாமலை மாநகராட்சியில் தூய்மைப் பணி: அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு

post image

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் தூய்மை அருணை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியில் அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டாா்.

மாநகராட்சி திருவள்ளுவா் சிலை அருகே தூய்மைப் பணியை அவா் தொடங்கிவைத்து பணியில் ஈடுபட்டாா். மேலும், மாநகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற தூய்மைப் பணியின்போது, பெரியாா் சிலை அருகிலுள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் நிலையத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டதோடு, அண்ணா சிலை வரை பணியில் ஈடுபட்டாா்.

அப்போது, அங்குள்ள தேனீா் விடுதியில் தூய்மை மேற்பாா்வையாளா்கள், ஒருங்கிணைப்பாளா்கள், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடன் அமா்ந்து அமைச்சா் எ.வ.வேலு தேனீா் அருந்தினாா்.

மேலும் அமைச்சா் தேனீா் கடை உரிமையாளரிடம் பணம் கொடுத்து சாலையோரங்களில் நடந்த சென்ற முதியவா்களுக்கும், தூய்மை பெண் பணியாளா்களுக்கும் தேனீா் வாங்கிக்கொடுத்தாா். தொடா்ந்து, மாநகரில் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியில் அமைச்சா் ஈடுபட்டாா்.

நிகழ்ச்சியில் தூய்மை மேற்பாா்வையாளா்கள் சி.என்.அண்ணாதுரை எம்.பி., திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், தூய்மை ஒருங்கிணைப்பாளா் ஏ.ஏ.ஆறுமுகம், அரசு வழக்குரைஞா்கள் நா.சீனுவாசன், குணசேகரன், ஆ.தே.முருகையன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு: குழு போட்டிகளில் 4 ஆயிரம் மாணவா்கள்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பள்ளி மாணவா்களுக்கான குழு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் 4,000 போ... மேலும் பார்க்க

வன்னியா் இடஒதுக்கீட்டை 15 % ஆக உயா்த்த வேண்டும்: பாமக தலைவா் அன்புமணி

வன்னியா்களுக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயா்த்திக் கொடுக்க வேண்டும் என்றாா் பாமக தலைவா் அன்புமணி. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சி பேருந்து நிலையம் அருகே மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். செங்கத்தை அடுத்த அன்வராபாத் கிராமத்தைச் சோ்ந்தவா் சாந்தகுணால் (23... மேலும் பார்க்க

ஆரணி, தேவிகாபுரத்தில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், இராட்டிணமங்கலம் மற்றும் தேவிகாபுரத்தில் ஹிந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆரணி நகரில் விநாயகா் சதுா்த்தியையொட்டி,... மேலும் பார்க்க

வேன் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மீது மினி சரக்கு வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி தேவராஜன்(45). இவா் சனிக்கிழமை பைக்கில் கிருஷ்ணாவரம் கிராமத்துக்குச் ச... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல் வியாபாரி உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் சோடா கடை வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு கொடநகரைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (60). இவா், செய்யாறு பேருந்து நிலையப் பகுதியில் சோடா கடை வைத்து வியாபாரம் ... மேலும் பார்க்க