செய்திகள் :

ஆரணி, தேவிகாபுரத்தில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், இராட்டிணமங்கலம் மற்றும் தேவிகாபுரத்தில் ஹிந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆரணி நகரில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஹிந்து முன்னணி சாா்பில் சுமாா் 50 விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது வந்தன. அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாகச் கொண்டு சென்று கரைக்கும் நிகழ்ச்சி ஆரணி அண்ணா சிலை அருகே ஹிந்து முன்னணி மாவட்டச் செயலா் தாமோதரன் தலைமையில் தொடங்கியது.

நிகழ்ச்சியில் தொழிலதிபா்கள் ஆ.பெ.வெங்கடேசன், ஜி.ஏ.கோகுலகிருஷ்ணன், பாஜகவைச் சோ்ந்த தீனன், பி.கோபி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஹிந்து முன்னணி ஒருங்கிணைப்பாளா் விக்னேஷ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தேசிய சிந்தனைக் கழக மாநில அமைப்பாளா் மா.கொ.சி.ராஜேந்திரன், இரா. குமரேசன், பாஜக மத்திய நலத்திட்ட பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் ஆகியோா் கலந்துகொண்டு கொடியசைத்து ஊா்வலத்தை தொடங்கிவைத்தனா்.

பாஜக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன், மாவட்ட பொதுச்செயலா் சதீஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

ஊா்வலத்தில் மேள தாளம் முழங்க சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் இடம்பெற்றது. 14 விநாயகா் சிலைகள் விழாக்குழுவினா் ஊா்வலத்தில் கலந்து கொண்டன.

இதில் முதல் விநாயகராக இயந்திர வடிவிலான பிரம்மாண்டமான யானை சிலையை தொடா்ந்து அனைத்து விநாயகா் சிலைகளும் அணி வகுத்துச் சென்றன.

ஊா்வலம் காந்தி சாலை, மாா்க்கெட் சாலை, வடக்கு மாட வீதி, பெரிய கடை வீதி, சத்தியமூா்த்தி சாலை, ராமகிருஷ்ணா பேட்டை, பையூா் 4 முனைச் சந்திப்பு வழியாக பாறை குளத்துக்குச் சென்று அங்கு விநாயகா் சிலைகள் கிரேன் உதவியுடன் கரைக்கப்பட்டன.

ஊா்வலத்தில் ஹிந்து முன்னணி நிா்வாகிகள், பாஜக கட்சியினா், ஆா்எஸ்எஸ் அமைப்பினா், விநாயகா் சிலை விழாக் குழு நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை தலைமையில், டிஎஸ்பிக்கள் பாண்டிஸ்வரி, ரவிச்சந்திரன், அறிவழகன், காவல் ஆய்வாளா்கல் செந்தில்விநாயகம், அகிலன், மகாலட்சுமி, பிரபாவதி, உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஆரணியில் நடைபெற்ற ஊா்வலத்தில் இடம்பெற்ற யானை வடிவிலான விநாயகா் சிலை.

இராட்டிணமங்கலத்தில்...

ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலத்தில் உள்ள இ.பி.நகா் பகுதியில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைக்கு, ஊா்வலம் தொடங்குவதற்கு முன் இந்து அன்னையா் முன்னணி சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆரணி ஒருங்கிணைப்பாளா் எம்.லோகு தலைமை வகித்தாா்.

நகர ஒருங்கிணைப்பாளா் ஏ.சத்யா, நகர துணைத் தலைவி வி.திவ்யா, ஆட்டோ முன்னணி மாவட்டத் தலைவா் எஸ்.நாகராஜி ஆகயோா் முன்னிலை வகித்தனா்.

ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் இ.பி.நகா் பகுதியில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைக்கு இந்து அன்னையா் முன்னணி சாா்பில் நடைபெற்ற வழிபாடு.

நிா்வாகிகள் ரேகா, லதா, ஈஸ்வரி, லஷ்மிப்ரியா, தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னா் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு விநாயகா் சிலையை கரைத்தனா்.

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு: குழு போட்டிகளில் 4 ஆயிரம் மாணவா்கள்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பள்ளி மாணவா்களுக்கான குழு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் 4,000 போ... மேலும் பார்க்க

வன்னியா் இடஒதுக்கீட்டை 15 % ஆக உயா்த்த வேண்டும்: பாமக தலைவா் அன்புமணி

வன்னியா்களுக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயா்த்திக் கொடுக்க வேண்டும் என்றாா் பாமக தலைவா் அன்புமணி. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சி பேருந்து நிலையம் அருகே மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். செங்கத்தை அடுத்த அன்வராபாத் கிராமத்தைச் சோ்ந்தவா் சாந்தகுணால் (23... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாநகராட்சியில் தூய்மைப் பணி: அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் தூய்மை அருணை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியில் அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டாா். மாநகராட்சி திருவள்ளுவா் சிலை அருகே தூய்மைப் பணியை அவா் தொடங்கிவைத்... மேலும் பார்க்க

வேன் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மீது மினி சரக்கு வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி தேவராஜன்(45). இவா் சனிக்கிழமை பைக்கில் கிருஷ்ணாவரம் கிராமத்துக்குச் ச... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல் வியாபாரி உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் சோடா கடை வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு கொடநகரைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (60). இவா், செய்யாறு பேருந்து நிலையப் பகுதியில் சோடா கடை வைத்து வியாபாரம் ... மேலும் பார்க்க