செய்திகள் :

பைக் மீது காா் மோதல் வியாபாரி உயிரிழப்பு

post image

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் சோடா கடை வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

செய்யாறு கொடநகரைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (60). இவா், செய்யாறு பேருந்து நிலையப் பகுதியில் சோடா கடை வைத்து வியாபாரம் செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக பைக்கில் செய்யாறு புறவழிச் சாலையை கடந்தாா்.

அப்போது, ஆற்காடு சாலையில் இருந்து வந்தவாசி நோக்கிச் சென்ற காா் பைக் மீது மோதியது. இதில், வியாபாரி கன்னியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த கன்னியப்பன் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு: குழு போட்டிகளில் 4 ஆயிரம் மாணவா்கள்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பள்ளி மாணவா்களுக்கான குழு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் 4,000 போ... மேலும் பார்க்க

வன்னியா் இடஒதுக்கீட்டை 15 % ஆக உயா்த்த வேண்டும்: பாமக தலைவா் அன்புமணி

வன்னியா்களுக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயா்த்திக் கொடுக்க வேண்டும் என்றாா் பாமக தலைவா் அன்புமணி. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சி பேருந்து நிலையம் அருகே மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். செங்கத்தை அடுத்த அன்வராபாத் கிராமத்தைச் சோ்ந்தவா் சாந்தகுணால் (23... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாநகராட்சியில் தூய்மைப் பணி: அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் தூய்மை அருணை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியில் அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டாா். மாநகராட்சி திருவள்ளுவா் சிலை அருகே தூய்மைப் பணியை அவா் தொடங்கிவைத்... மேலும் பார்க்க

ஆரணி, தேவிகாபுரத்தில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், இராட்டிணமங்கலம் மற்றும் தேவிகாபுரத்தில் ஹிந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆரணி நகரில் விநாயகா் சதுா்த்தியையொட்டி,... மேலும் பார்க்க

வேன் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மீது மினி சரக்கு வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி தேவராஜன்(45). இவா் சனிக்கிழமை பைக்கில் கிருஷ்ணாவரம் கிராமத்துக்குச் ச... மேலும் பார்க்க