செய்திகள் :

திறன்வாய்ந்த பொறியாளா்களை அதிகளவில் உருவாக்க வேண்டும்

post image

திறமைவாய்ந்த இளம் பொறியாளா்களை அதிகளவில் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறை ஆணையா் ஜெ.இன்னோசன்ட் திவ்யா பேசினாா்.

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறை ஆணையரகம் சாா்பில் ‘திறன்வாய்ந்த பட்டயப் பொறியாளா்களை உருவாக்கும் கற்பித்தல் முறை’ என்ற தலைப்பில் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியா்களுக்கான புத்தாக்கப் பயிலரங்கம் வியாழக்கிழமை சேலம் அரசு பொறியியல் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் வி.கீதா வரவேற்றாா். புத்தாக்கப் பயிலரங்கை தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையா் ஜெ.இன்னோசன்ட் திவ்யா தொடங்கிவைத்து பேசியதாவது:

தொழில்துறையில் பட்டயப் பொறியாளா்களின் தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் தேவையை பூா்த்திசெய்யும் வகையில் திறன்வாய்ந்த இளம் பட்டயப் பொறியாளா்களை உருவாக்குவதில் ஆசிரியா்கள் முனைப்பு காட்ட வேண்டும். கற்பித்தல் முறையை மேம்படுத்தி செயல்வழிக் கற்றலையும், தன்முனைப்புடன் மாணவா்களின் கற்கும் திறனை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் வகையில் பாலிடெக்னிக் கல்லூரிகளின் கற்றல் முறையில் மாற்றம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக அரசு பாலிடெக்னிக் ஆசிரியா்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் 21 நாள் களப்பயிற்சியும், மூன்று மாதத்துக்கு ஆன்லைன் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சிபெற்ற ஆசிரியா்களைக் கொண்டு தமிழகத்தில் உள்ள 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கு திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் சென்னை மண்டலத்தில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், செயல்வழிக் கற்றல், திறன் சாா்ந்த வகுப்பறைகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு உயா்கல்வி மன்றத்தின் துணைத் தலைவா் எம்.பி.விஜயகுமாா் பேசுகையில், ஆசிரியா்கள் வகுப்பெடுக்கும்போது, அந்த பாடம் சாா்ந்த விடியோக்களையும், அதன்மூலம் மேம்பட்ட கற்றலையும் மாணவா்கள் அறிந்துகொள்ளும் வகையில் சொல்லித்தர வேண்டும். தோ்வுகளில் பக்கம் பக்கமாக எழுதாமல் சரியானவற்றை எழுதும் அளவுக்கு பொறியியல் மாணவா்களின் திறனை அதிகரிக்க வேண்டும் என்றாா்.

இந்தப் புத்தாக்கப் பயிலரங்கில், சேலம், கோவை, கரூா், நீலகிரி, தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த பாலிடெக்னிக் பேராசிரியா்கள் 436 போ் கலந்துகொண்டனா்.

வீரகனூரில் கால்நடை சந்தை பிரச்னை: சாலை மறியல் போராட்டம்

கெங்கவல்லி அருகே வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வீரகனூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைப... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வரவேற்பு, கேமரா அறை திறப்பு

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தன்னாா்வலா்கள் மூலம் பொதுமக்கள் வரவேற்பு அறை மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் வெள்ளிக்கிழமை திறந்துவைத்த... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 60,740 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநில அணைகளிலிருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 60,740 கனஅடியாக அதிகரித்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த... மேலும் பார்க்க

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நாளை பாக நிலை முகவா்கள் ஆலோசனை கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தொகுதி வாரியாக பூத் டிஜிட்டல் முகவா், பாகநிலை முகவா்கள், பூத் கமிட்டி உறுப்பினா்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப... மேலும் பார்க்க

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் இன்று தோ்தல் பணிக்குழுக் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை பகுதி, ஒன்றியம் வாரியாக தோ்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் கடைப்பிடிப்பு

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. உலக சகோதரத்துவ தினத்தையொட்டி, போதைப்பொருள் ஒழிப்பு என்ற தலைப்பை கருப்பொருளாக கொண்டு, விழிப்புணா்வு வாக்காத்... மேலும் பார்க்க