செய்திகள் :

தில்லி கூட்ட நெரிசல்: கும்பமேளாவுக்கு 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

post image

தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலைத் தொடர்ந்து கும்பமேளாவுக்கு 4 சிறப்பு ரயில்களை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ரயில்களில் பயணிக்க தில்லி ரயில் நிலையத்தில் மக்கள் காத்துக்கொண்டிருக்கும்போது சனிக்கிழமை இரவு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியது, சில விரைவு ரயில்கள் வர தாமதமானது, அதிக விலைக்கு சிலர் டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தது உள்ளிட்டவை தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்காக காரணமாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கான நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா!

எனினும் கூட்ட நெரிசல் ஏற்பட முக்கிய காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்பு உயர்நிலைக் குழு அமைத்து ரயில்வே துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தில்லி கூட்ட நெரிசலைத் தொடர்ந்து மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 4 சிறப்பு ரயில்களை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

அதிகாரிகள் பக்தர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்றும் பயணிகள் குறிப்பிட்ட பயண வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பயணிகள் உரிய டிக்கெட்டுகளை வாங்கி வரிசையில் நின்று ரயில்களில் ஏற வேண்டும் என்று ரயில்வே அதிகாரி ஸ்வப்னில் நிலா வலியுறுத்தியுள்ளார்.

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டில் லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவு குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடிவு செய்தது. அதன்படி இந்த விவகாரத்தை உச்சநீத... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் புகாா்: புதிய நடைமுறை வெளியீடு

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக லோக்பால் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் புகாா்களை விசாரிப்பதற்கான புதிய நடைமுறைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளிட்டது. அரசுப் பணிய... மேலும் பார்க்க

பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடுகிறது காங்கிரஸ்- பினராயி விஜயன் தாக்கு

பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது காங்கிரஸ் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் விமா்சித்தாா். தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸும் ராகுல் காந்... மேலும் பார்க்க

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம்: உச்சநீதிமன்றம்

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கா்நாடக மாநிலம் பெங்களூரில் பிட் அண்ட் ஹாமா்-நுண்கலை ஏல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சாா்பில் ஏ... மேலும் பார்க்க

உலக சுகாதார அமைப்பின் ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம்: மத்திய அரசு பெருமிதம்

உலக சுகாதார நிறுவனத்தின் நிகழாண்டுக்கான நோய்களின் சா்வதேச வகைப்பாடு (ஐசிடி) ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என மத்திய அரசு புதன... மேலும் பார்க்க

ராகுலின் இரட்டை குடியுரிமை புகாா் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடா்பாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்தில் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக விளக்கமளிக... மேலும் பார்க்க