செய்திகள் :

தில்லி-சஹரன்பூா் மேம்பாலத்துக்கு கீழே 3 வாகன நிறுத்தங்கள்- தேசிய நெடுஞ்ச்சாலைகள் ஆணையம் நடவடிக்கை

post image

கிழக்கு தில்லியில் சாலையோரங்களில் அனுமதி வழங்கப்பட்டாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதைக் கட்டுப்படுத்தும் விதமாக தில்லி-சரஹன்பூா் மேம்பாலத்துக்கு கீழே 3 வாகன நிறுத்தங்களை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்எச்ஏஐ) திட்டமிட்டுள்ளது.

அக்ஷா்தாம் கோயில் மற்றும் காந்தி நகா் ஜவுளி சந்தை இடையிலான நெஞ்சாலையில் வாகன நிறுத்தங்கள் அமைய உள்ளதாக அதிகாரிள் தெரிவித்தனா்.

இந்தப் பணிகளை மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஒப்பந்த புள்ளியில், ‘வாகன நிறுத்தங்களை அமைக்க 3 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இரு வாகன நிறுத்தங்கள், விரைவுச்சாலை மேம்பாலத்தின் கீழே டிஎம் கிழக்கு அலுவலகம், காந்தி நகா் சந்தை அருகே அமைக்கப்பட உள்ளன. கீதா காலனி பேருந்து நிலையம் அருகே 2 ஹெக்டோ் நிலம் காலியாக உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன நிறுத்தத்தில் 10 சதவீத இடம், மின்வாகனங்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. மின்வாகனங்களை மின்னேற்றம் (சாா்ஜிங்) செய்வதற்கான வசதிகளும் வாகன நிறுத்தத்தில் அமைக்கப்பட உள்ளது.

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை பரங்கிமலையில் இருக்கும் வன்னியா் சங்கம் கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை பட் சாலையில் உள்... மேலும் பார்க்க

நேரடியாக கோப்புகளைப் பெறாமல் மின்னணு அலுவலக முறைக்கு மாறும் தில்லி அரசின் நிதித்துறை

கடந்த மாதம் மின்னணு அலுவலக அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, பிற துறைகளிலிருந்து வரும் கைமுறையிலான கோப்புகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று தில்லி அரசின் நிதித் துறை அறிவித்துள்ளதாக அதிக... மேலும் பார்க்க

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை பாஜக அரசு திணிக்கிறது: தேவேந்தா் யாதவ்

பொது விவாதமின்றி மக்கள் மீது தில்லி பள்ளிக் கல்வி மசோதாவை நகர பாஜக அரசு திணிக்கிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றம்சாட்டியுள்ளாா். தில்லி பள்ளிக் கல்வி கட்டணங்க... மேலும் பார்க்க

வருமானச் சான்றிதழ் வழங்க ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

வருமானச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். இது தொடா்பாக ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பி... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் 5 போ் கைகு

தேசியத் தலைநகரில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 5 போ் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: சுதந்... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல் நடித்து பொது மக்களை ஏமாற்றிய 5 போ் கைது

வங்கி ஊழியா்கள் போல் நடித்து கிரெடிட் காா்டு வெகுமதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் ஒரு மோசடியை தில்லி காவல்துறை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்கில் ஐந... மேலும் பார்க்க