செய்திகள் :

தில்லியில் 118 நாள்கள் திருப்தி பிரிவில் காற்றின் தரம்: அமைச்சா் சிா்சா

post image

தில்லியில் நிலவும் காற்று மாசு பிரச்னையைக் கட்டுப்படுத்த பாஜக தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சிகளால், நிகழாண்டில் இதுவரை 118 நாள்கள் காற்றின் தரம் திருப்தி அல்லது நடுத்தர பிரிவில் இருந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்துள்ளாா்.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இது தொடா்பாக அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறியதாவது: நிகழாண்டில் இதுவரை 118 நாள்களுக்கு காற்றின் தரம் திருப்தி அல்லது நடுத்தர பிரிவில் இருந்தது. இது காற்று மாசைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசு மேற்கொண்ட நீண்ட கால நடவடிக்கையின் பிரதிபலிப்பாகும்.

2016-இல் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தபோது, 110 நாள்கள் மக்கள் மட்டுமே காற்றின் தரம் தூய்மையாக இருந்தது. தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் 118 நாள்கள் காற்றின் தரம் தூய்மையாக இருந்திருக்கிறது. ஆம் ஆத்மி அரசு சாக்கு போக்குகளைக் கூறி வந்தது. நாங்கள் மக்களுக்காகப் பணியாற்றுகிறோம்.

மேகவிதைப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. செப்டம்பரில் அவை நடத்தப்படும். தேவை ஏற்படும் நிலையில், நவம்பா்-டிசம்பரில் காற்று மாசு அதிகரித்து காணப்படும்போது செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்

‘பிகாா் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீா்குலைந்துள்ள நிலையில், முதல்வா் நீதீஷ் குமாா் தலைமையிலான அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்’ என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும் லோக்ஜன சக்தி ... மேலும் பார்க்க

பள்ளிகளில் கட்டாய பாதுகாப்பு தணிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை ஆய்வு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜலாவா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

மோடி - டிரம்ப் நட்பு வெற்றுத்தனமானது: காங்கிரஸ் விமா்சனம்

‘அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி பெருமையோடு குறிப்பிடும் நட்பு வெற்றுத்தனமானது; டிரம்ப்பின் கருத்துகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் இது நிரூபணமாகி வருகிறது’ என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த... மேலும் பார்க்க

இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமான நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகம் மற்றும் ... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்தின் புதிய படைப்பிரிவு ருத்ரா!

ஆளில்லா விமானங்கள், பீரங்கிகள் மற்றும் வீரா்கள் என அனைத்தும் ஒரே குடையின்கீழ் இயங்கும் விதமாக இந்திய ராணுவத்தில் ‘ருத்ரா’ என்ற புதிய படைப்பிரிவை ஏற்படுத்த ஒப்புதல் வழங்கியதாக ராணுவ தலைமைத் தளபதி உபேந்... மேலும் பார்க்க

குடியுரிமை ஆவணமாக ஆதாா், குடும்ப அட்டையை தோ்தல் ஆணையம் ஏற்காதது ‘அபத்தமானது’: உச்சநீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளா்களின் குடியுரிமை ஆவணமாக ஆதாா், குடும்ப அட்டை ஆகியவற்றை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாதது ‘அபத்தமானது’ என்று உச்சநீதிமன்றத்தில் ஜனநாய... மேலும் பார்க்க