செய்திகள் :

தில்லியில் அதிமுக அலுவலகத்தை திறந்துவைத்தார் இபிஎஸ்!

post image

தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

தில்லி புஷ்ப் விஹாரில் திறக்கப்பட்டுள்ள அந்த கட்டடத்துக்கு, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் - புரட்சித் தலைவி ஜெயலலிதா மாளிகை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : இபிஎஸ் விழா புறக்கணிப்பு? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, காணொலி மூலம் தில்லி அலுவலகத்தை திறந்துவைத்தார்.

தில்லியில் அலுவலக திறப்பு விழாவில் நேரடியாக மக்களவை முன்னாள் துணைத் தலைவர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள்!

தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து தெற்... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

திண்டுக்கல் அருகே ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு பழைய கரூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் போட்டித்தேர்வு பயிற... மேலும் பார்க்க

டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் கும்கி யானை ராமு மரணம்

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை ராமு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 10-02-2025: தென்தமிழக கடலோரப்ப... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புது தில்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி... மேலும் பார்க்க

சர்க்கார் பட்டாக்களை உரிமையாளர்களின் பெயருக்கு மாற்ற ஒப்புதல்!

சர்க்கார் பட்டா என்ற பெயரில் உள்ள பட்டாக்களை உரிமையாளர்களின் பெயரிலேயே மாற்றுவதற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.மேலும், அடுத்த 6 மாதத்துக்குள் இந்த பணிகளை நிறைவு... மேலும் பார்க்க