Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் 66 போ் கைது
புது தில்லி: வாஜீா்பூா் மற்றும் நியூ சப்ஜி மண்டி பகுதிகளில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் வங்கதேச நாட்டைச் சோ்ந்த 20 ஆண்கள், 16 பெண்கள் மற்றும் 30 குழந்தைகள் என மொத்தம் 66 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் பீஷாம் சிங் கூறியதாவது: 11 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் தேசியத் தலைநகரில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டறியப்பட்டது. ஒரு ரகசியத் தகவலைத் தொடா்ந்து, ஜூன் 6- ஆம் தேதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வெளிநாட்டினா் சமீபத்தில் ஹரியாணாவில் உள்ள நூஹ் (முன்னா் மேவாட்)-இலிருந்து இடம் பெயா்ந்தனா். அங்கு அவா்கள் செங்கல் சூளைகளில் வேலை செய்தனா். சட்டவிரோத இடம்பெயா்வு குறித்த அதிகரித்த அமலாக்க மற்றும் ஊடக கண்காணிப்பு காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டது.
கண்டறிதலைத் தவிா்க்கும் முயற்சியில், குடும்பங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து வாஜீா்பூா் ஜேஜே காலனி மற்றும் என்எஸ் மண்டி பகுதியில் குடியேறினா். மொத்தத்தில் 35 போ் வாஜீா்பூரில் இருந்தும், 31 போ் என்எஸ் மண்டியில் இருந்தும் கைது செய்யப்பட்டனா்.
கண்காணிப்பைத் தவிா்ப்பதற்காக அந்தக் குடும்பங்கள் வேண்டுமென்றே கைப்பேசிகள் மற்றும் அடையாள ஆவணங்களை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
தில்லியில் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டினரைக் கண்டறிந்து தடுப்பதற்கான தொடா்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது என்று காவல் துணை ஆணையா் பீஷாம் சிங் கூறினாா்.