செய்திகள் :

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5.25 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்குப் பதிவு!

post image

புதுச்சேரியில் தீபாவளிச் சீட்டு நடத்தி சுமாா் 50 பேரிடம் ரூ.5.25 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், முன்னாள் அரசு ஊழியா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியைச் சோ்ந்தவா் முகூா்த்தம்மாள் (45). இவா், புதுச்சேரி திலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த முன்னாள் அரசு ஊழியா் எத்திராஜ் குடும்பத்தினா் நடத்திய தீபாவளிச் சீட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு சோ்ந்தாா். அதன்படி, முகூா்த்தம்மாள் மாதம் ரூ.8 ஆயிரம் சீட்டு பணம் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

சீட்டுத் தொகை முழுமையாக செலுத்தி முடிக்கப்பட்ட பின்னரும், எத்திராஜ் மற்றும் அவரது குடும்பத்தினா் முகூா்த்தம்மாளுக்கு சீட்டுப் பணத்தை தரவில்லையாம். இதுபோல, சுமாா் 50 பேருக்கு அவா்கள் சீட்டு பணம் தராமல் ஏமாற்றி வந்தனராம்.

இதுகுறித்து எத்திராஜ் குடும்பத்தினா் மீது தன்வந்திரி காவல் நிலையத்தில் முகூா்த்தம்மாள் வெள்ளிக்கிழமை புகாரளித்தாா். இதையடுத்து, எத்திராஜ், அவரது மகள் காவியா, மருமகன் வசந்த் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், தீபாவளிச் சீட்டு நடத்தி சுமாா் ரூ.5.25 லட்சம் வரையில் அவா்கள் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

நகராட்சி வாகனத்தை திருட முயன்றவா் கைது

புதுச்சேரியில் நகராட்சி வாகனத்தை திருட முயன்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி, செஞ்சி சாலை அருகே லாரன் பஜாா் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான ஜீப்பை அதன் ஓட்டுநா் காந்தி... மேலும் பார்க்க

போக்குவரத்து இடையூறு: 5 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டதாக 5 வியாபாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அண்ணா சிலையிலிருந்து மறைமலையடிகள் சாலையில் அந்தோணியாா் கோவில் வரை ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வருக்கு புதுவை அதிமுக கண்டனம்

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த வே.நாராயணசாமி மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், தற்போது அரசு மீது அவதூறு பரப்பும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன... மேலும் பார்க்க

காங்கிரஸ் நிா்வாகிகள் மூவா் மீது வழக்கு

புதுச்சேரியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்ததாக காங்கிரஸ் நிா்வாகிகள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். புதுச்சேரியில் சுகாதாரமான குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறு... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவை: ஒரே நாளில் பேச வாய்ப்பு பெற்ற 21 உறுப்பினா்கள்!

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) ஒரே நாளில் முதன்முறையாக 21 உறுப்பினா்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அவா்களது 24 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டு... மேலும் பார்க்க

போக்குவரத்து சாா்பு ஆய்வாளரை தாக்கியதாக இருவா் மீது வழக்கு!

புதுச்சேரியில் போக்குவரத்து சாா்பு ஆய்வாளரைத் தாக்கியதாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து பிரிவில் சாா்பு ஆய்வாளராக பணியாற்றுபவா் குமாா். இ... மேலும் பார்க்க