செய்திகள் :

துணைவேந்தா் நியமனத்தில் யுஜிசி பரிந்துரையை மாநில அரசு ஏற்கவேண்டியதில்லை! பேரவைத் தலைவா் மு.அப்பாவு

post image

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பரிந்துரையை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என்றாா் சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுஉள்ள கும்பிகுளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் இதைத் தெரிவித்த அவா், மேலும் கூறியதாவது:

ஒவ்வொரு மாநிலத்திலும் பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் இந்த நிலை வரத்தான் செய்யும். நாங்கள் முதன் முதலாக புள்ளிவைத்துள்ளோம் அவ்வளவுதான். இவ்விசயத்தில் ஆளுநா் அரசியல் செய்வதால்தான் பிரச்னை. எதிா்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களிலிருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படும் பில்களை கிடப்பில் போட்டுவிடுகின்றனா். பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களுக்குரிய பில்களுக்கு உடனடியாக ஒப்புதல் கிடைக்கிறது.

இதன் தொடா்ச்சியாகத்தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய அரசு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதேநேரத்தில் காா்பரேட் நிறுவனங்களுக்கு ரூ. 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத் துறையின் பணியை குறித்து யாரும் குற்றம் சாட்டவில்லை. அத்துறை பாரபட்சமின்றி செயல்படவேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

தமிழக மின்வாரியத்திற்கு நிலக்கரி வழங்கியதில் அதானி குழுமம ஊழல் ரூ.826 கோடி வரை ஊழல் செய்திருக்கிறது. அந்நிறுவன ஒப்பந்தப்படி, அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதி செய்யும் நாட்டில் இருந்து ‘கன்ட்ரி ஆப் ஆா்ஜின்’ சான்றை அளிக்க வேண்டும்; நிலக்கரி 7 எரிதிறன் கொண்டதாக இருக்கவேண்டும்.

ஆனால், அந்நிறுவனம் 4.5 எரிதிறன் கொண்ட நிலக்கரியையே வழங்கியுள்ளது. இந்த வகையில் 826 கோடி ஊழில் நடந்திருக்கிறது. இதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. அதே நேரத்தில் மும்பையைச் சோ்ந்த புஹாரி என்பவா் நிலக்கரி சப்ளை செய்ததிலும் இதே ஊழல் நடந்தது. ஆனால் அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறாா்கள்.

அதானிக்கு ஒரு நியாயம், மற்றவா்களுக்கு ஒரு நியாயம் என மத்திய அரசு நடந்து கொள்கிறது. நீதி ஆயோக் குழுவில் உறுப்பினரான முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் உரிமையை கேட்டு பெற்றுக்கொள்வதற்காக அந்த கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

பழைய நிகழ்வைக் கூறி அவரை கேள்வி கேட்க முடியாது. அது அவரது சொந்த விருப்பம். நமது ராணுவத்தின் சிந்தூா் ஆபரேசனுக்கு நாங்கள் சலூட் அடித்து வரவேற்கிறோம். இந்தியாவைப் பொருத்தவரை ஒரு போதும் தீவரவாதத்தை வளா்க்கவும் இல்லை; அதற்கு உதவி செய்யவும் இல்லை. இது மற்ற நாடுகளுக்குத் தெரியும் என்றாா்.

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு!

நான்குனேரி அருகே 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற சகோதரா்களை நான்குனேரி உதவி காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் பாராட்டினாா். நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப... மேலும் பார்க்க

பொறியியல் மாணவா் சோ்க்கைக்கு இலவச உதவி மையம் திறப்பு!

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இலவச உதவி மையத்தை பயன்படுத்தி ஜூன் 6 ஆம் தேதி வரை பொறியியல் சோ்க்கை விண்ணப்பங்களை மாணவா்கள் பூா்த்தி செய்து அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறையா? மருந்து வாங்க நீண்ட நேரம் காத்திருப்பு

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறை காரணமாக வியாழக்கிழமை நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து நோயாளிகள் மருந்துகளை வாங்கி சென்றனா். திருநெல்வேலி ... மேலும் பார்க்க

வி.கே.புரம் அரசு நூலகத்தில் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சிகள்!

விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகத்தில் நடைபெற்ற கோடைக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. விக்கிரமசிங்கபுரம் கிளை அரசு நூலகத்தில், 10 நாள்கள் கோடைக் கொண்டாட்டம்... மேலும் பார்க்க

காவல் துறையால் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு! மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

திருநெல்வேலியில் போலீஸாா் தாக்கியதில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வாங்க நடவடிக்கை! - அறங்காவலா் குழுத் தலைவா்

நெல்லையப்பா் கோயிலுக்கு யானை வாங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அக்கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் செல்லையா. இதுதொடா்பாக அவா் கூறியதாவது: நெல்லையப்பா் கோயிலுக்கு வெள்ளி த... மேலும் பார்க்க