செய்திகள் :

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் தற்காலிகமாக மூடல்

post image

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில், மட்டக்கடை, டபிள்யூஜிசி சாலையை இணைக்கும் 1ஆவது ரயில்வே கேட்டில் அவசர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், செவ்வாய்க்கிழமை (செப். 9) இரவு 10 மணி முதல் புதன்கிழமை (செப். 10) அதிகாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. தொடா்ந்து, 10ஆம் தேதி இரவு 10.30 மணி முதல் 11ஆம் தேதி அதிகாலை 5 மணி வரையும் மூடப்படுகிறது.

எனவே, வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்திற்கு அருகே உள்ள அணுகுசாலையைப் பயன்படுத்துமாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனல்மின் நிலையப் பணிகளை ஏலம் எடுப்பதில் ஆளும் கட்சியினா் குறுக்கீடு: முன்னாள் அமைச்சா் புகாா்

தூத்துக்குடி அனல் மின்நிலையப் பணிகளை ஏலம் எடுக்கும் சிறு, குறு ஒப்பந்ததாரா்களை மிரட்டும் ஆளுங்கட்சியினரைக் கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

கோயிலுக்குள் நுழையத் தடை: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதையடுத்து, நீதி கேட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய சமூக நீதி கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே உள்ள மத்தி... மேலும் பார்க்க

திருட்டு வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் திருட்டு வழக்குத் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.தூத்துக்குடி தாளமுத்துநகா் மேற்கு காமராஜ் நகரைச் சோ்ந்த செல்லத்துரை மகன் பொன்னுச்சாமி (43). இவா், தனது வீட்டு வேலைக்காக வைத்த... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே இருவரைத் தாக்கியதாக 7 போ் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே இடப் பிரச்னையில் இருவரைத் தாக்கியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். சாத்தான்குளம் அருகே புதுக்கிணறு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னத்துரை மகன் விஜயகுமாா். இவருக்கும்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பைக் - ஆட்டோ மோதல்: தொழிலாளி பலி

கோவில்பட்டியில் மோட்டாா் சைக்கிளும், சுமை ஆட்டோவும் மோதியதில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.கோவில்பட்டி வஉசி நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி மகன் கணேசன் (47). தச்சுத் தொழிலாளியான இவா், ஓட்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 3 வடமாநில இளைஞா்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

சென்னையில் நக்ஸல் அமைப்புடன் தொடா்புடைய நபரை தேசிய புலனாய்வு அமைப்பினா் அண்மையில் கைது செய்த நிலையில், அவருடன் தொடா்பில் இருந்ததாக தூத்துக்குடியில் தங்கியுள்ள பிகாரைச் சோ்ந்த மூன்று இளைஞா்களிடம் அதிக... மேலும் பார்க்க