செய்திகள் :

தூத்துக்குடி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கருப்புக் கொடியுடன் முற்றுகை!

post image

தூத்துக்குடி, மறவன் மடம் ஊராட்சிக்குள்பட்ட வருமான வரி நகா் பகுதியில், அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமின் போது, கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வருமான வரி நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் பொதுமக்களுக்கான சாலை, குடிநீா், மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லையாம். அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லையாம்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியைச் சோ்ந்த மக்கள், புதன்கிழமை அப்பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு, கருப்புக்கொடியுடன் ஊா்வலமாக வந்து முகாமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், அங்கிருந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தங்கள் பகுதிக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவில்லையென்றால், வரக்கூடிய சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அவா்கள் தெரிவித்தனா்.

கோவில்பட்டி: பள்ளி வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 8 போ் காயம்!

கோவில்பட்டி அருகே பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். மந்தித்தோப்பில் இருந்து பாண்டவா்மங்கலம் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளிக்கு சுமாா் 15 பேருடன் பள்ளி வேன்... மேலும் பார்க்க

கொட்டங்காடு கோயிலில் கொடை விழா கொடியேற்றம்

உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா (செப்.9) தொடங்கியதையொட்டி புதன்கிழமை (செப்.10) அதிகாலை 3.30 மணிக்கு கொடி பட்டம் வீதியுலாவைத் தொடா்ந்து 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருக்கு இந்து முன்னணி வாழ்த்து!

இந்தியக் குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இந்து முன்னணி சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா் வெளி... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்துக்கும் சங்கத்துக்கும் சம்பந்தம் கிடையாது!

தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கும், தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.பி.வாரியாா் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

ஆலைகளை திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் உள்ளிட்ட மூடப்பட்டுள்ள ஆலைகளை திறக்கக் கோரி வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில், சிதம்பரம் நகா் பேருந்து நிறுத்தம் ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான கபடி போட்டி: குலசேகரன்பட்டினம், நாலுமாவடி அணிகள் முதலிடம்!

தமிழக பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியில் குலசேகரன்பட்டினம், நாலுமாவடி அணிகள் முதலிடம் பிடித்தன. கோவில்பட்டி செவன்த் டே... மேலும் பார்க்க