தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 515 மனுக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 515 மனுக்கள் பெறப்பட்டன.
ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, உதவித் தொகைகள், இலவச வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 493, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 22 என மொத்தம் 515 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசாா் அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, பணிக்காலத்தின்போது உயிரிழந்த பள்ளி சத்துணவுப் பணியாளரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை அவா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் தமிழரசி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.