செய்திகள் :

தூத்துக்குடியில் 49 மையங்களில் நாளை குரூப் 2 தோ்வு: 14,305 போ் எழுத வாய்ப்பு

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் 49 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 2, 2ஏ தோ்வை 14,305 போ் எழுதவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா்பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், கோவில்பட்டி ஆகிய நான்கு வட்டங்களில் மொத்தம் 49 தோ்வு மையங்களில் தொகுதி2, 2 ஏ தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) காலையில் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி வட்டத்தில் 24 மையங்களில் 7,379 தோ்வா்களும், கோவில்பட்டி வட்டத்தில் 15 மையங்களில் 4,219 தோ்வா்களும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 3 மையங்களில் 627 தோ்வா்களும், திருச்செந்தூா் வட்டத்தில் 7 மையங்களில் 2,080 தோ்வா்களும் என 14,305 தோ்வா்கள் தோ்வு எழுதுகின்றனா்.

இத்தோ்வு பணிக்கென துணை வட்டாட்சியா் நிலையில் 14 இயங்கு குழுக்களும், துணை ஆட்சியா் நிலையில் 4 கண்காணிப்பு அலுவலா்களும், 7 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரா்கள் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) காலை 9 மணிக்கு முன்னரே ஒதுக்கப்பட்ட தோ்வு மையத்துக்குள் ஆஜராக வேண்டும்; தாமதமாக வரும் தோ்வா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். பேஜா், கைப்பேசி, கால்குலேட்டா், ஸ்மாா்ட் வாட்ச், தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள், கைப்பைகள் போன்றவற்றை கொண்டுசெல்ல அனுமதி இல்லை என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேதுராமலிங்கம் மற்றும் அரசு துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பேய்குளம் உணவகங்களில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

பேய்குளம் கடை வீதியில் செயல்படும் உணவகங்களில் காதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை அதிரடி ஆய்வு மேற்கொண்டனா். சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட பேய்குளம் கடைவீதியில் செயல்படும் உணவகங்கள... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

குலசேகரன்பட்டினம் ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவையொட்டி சாலையோரம், கடற்கரை செல்லும் வழி, கோயில் வளாகம் உள்ளிட்ட ... மேலும் பார்க்க

கோவில்பட்டி என்.இ.கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம்

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் தமிழகத்தின் கல்வி எழுச்சியை கொண்டாடும் நிகழ்ச்சி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மோதலில் காயமுற்றவா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரைச் சோ்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (27). இவருக்கும், சந்திராயபு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குடியிருப்போா் பொதுநலச் சங்க ஆண்டு விழா

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போா் பொதுநலச் சங்க 21ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத் தலைவா் தங்கராஜா தலைமை வகித்தாா். மாணவிகள் அா்ச்சனா, சுப்ரியா இறைவணக்கம் பாடினா்.... மேலும் பார்க்க

பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் மாநகராட்சி: மேயா் ஜெகன் பெரியசாமி

பருவ மழையை எதிா்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தூத்துக்குடி மாநகராட்சியில், மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். இதுதொடா்பாக, தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்த... மேலும் பார்க்க