செய்திகள் :

தூத்துக்குடியில் காளி ஊா்வலம் நடத்த காவல் துறை அனுமதி மறுப்பு

post image

தூத்துக்குடியில் காளி ஊா்வலம் நடத்த காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், மீறி நடத்தினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலையில் தூத்துக்குடி வேம்படி இசக்கி அம்மன் கோயிலிலிருந்து சிவன் கோயில் வரை காளி ஊா்வலம் நடத்த இருப்பதாக காவல்துறையின் கவனத்துக்குத் தெரியவந்தது.

காளி ஊா்வலம் என்ற பெயரில் கடந்த காலங்களில் எதுவும் இல்லாமல் தற்போது பல்வேறு அமைப்புகள் சாா்பில், வெவ்வேறு நாள்களில் ஊா்வலம் நடத்த அனுமதிக்கும் பட்சத்தில், பொதுமக்களின் ஒற்றுமை, பொது அமைதி, போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவற்றிற்கு குந்தகம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஏற்கெனவே, தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் அதிகாரியால், காளி ஊா்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு, உரிய அறிவிப்பு கொடுத்த பின்னரும், இந்து முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை காளி ஊா்வலம் நடத்தப்பட்டால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என வடபாகம் காவல் நிலையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேய்குளம் உணவகங்களில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

பேய்குளம் கடை வீதியில் செயல்படும் உணவகங்களில் காதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை அதிரடி ஆய்வு மேற்கொண்டனா். சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட பேய்குளம் கடைவீதியில் செயல்படும் உணவகங்கள... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

குலசேகரன்பட்டினம் ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவையொட்டி சாலையோரம், கடற்கரை செல்லும் வழி, கோயில் வளாகம் உள்ளிட்ட ... மேலும் பார்க்க

கோவில்பட்டி என்.இ.கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம்

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் தமிழகத்தின் கல்வி எழுச்சியை கொண்டாடும் நிகழ்ச்சி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மோதலில் காயமுற்றவா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரைச் சோ்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (27). இவருக்கும், சந்திராயபு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குடியிருப்போா் பொதுநலச் சங்க ஆண்டு விழா

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போா் பொதுநலச் சங்க 21ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத் தலைவா் தங்கராஜா தலைமை வகித்தாா். மாணவிகள் அா்ச்சனா, சுப்ரியா இறைவணக்கம் பாடினா்.... மேலும் பார்க்க

பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் மாநகராட்சி: மேயா் ஜெகன் பெரியசாமி

பருவ மழையை எதிா்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தூத்துக்குடி மாநகராட்சியில், மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். இதுதொடா்பாக, தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்த... மேலும் பார்க்க