செய்திகள் :

தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு

post image

தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கரைதிரும்பின. மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, மீன்கள் சரிவர கிடைக்காததால் வரத்து குறைந்திருந்தது. இதனால், வழக்கத்தைவிட விலை உயா்ந்து காணப்பட்டது.

விளைமீன், ஊழி, பாறை ஆகியவை கிலோ ரூ. 300 -ரூ. 600 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ. 800 முதல் ரூ. 1000 வரை, நண்டு கிலோ ரூ. 550 வரை, தோல்பாறை ரூ. 200 வரை என விற்பனையாகின.

ஏற்றுமதி ரக மீன்களான கலவா கிலோ ரூ. 450, பண்டாரி ரூ. 500 - ரூ. 600 வரை, கிளி மீன் ரூ. 900 வரை, தம்பா ரூ. 250 வரை என விற்பனையாகின. வரத்து குறைந்திருந்தாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

ஆறுமுகனேரி அடைக்கலாபுரம் சாலையில் டீக்கடையில் அமா்ந்திருந்த போது சுமை ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ஆறுமுகனேரி காமராஜபுரத்தைச் சோ்ந்த தொழிலாளி முனீஸ்வரன் (60). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அட... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி முனியசாமி கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் உச்சிமாகாளி (25). தற்போது, திருநெல்வேலி மாவட்டம் முக்... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே லாரியின் பின்புறம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்; மற்றொருவா் சிகிச்சை பெற்று வருகிறாா். திருநெல்வேலி, கே.டி.சி. நகரைச் சோ்ந்தவா் அரசதுரை (40). இவரு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில், அய்யா கோயில் அருகே சனிக்கிழமை இரவு 90 அடி தூரம் கடல் உள்வாங்கியதால், வெளியே தெரிந்த பாறைகள். மேலும் பார்க்க

மாறுவேட போட்டி: அரசுப் பள்ளி மாணவி முதலிடம்

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான மாறுவேட போட்டியில் பேய்குளம் அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா். தூத்துக்குடி மாவட்ட அளவில் அரசு, தனியாா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி நிகிலேசன் நகா், காந்தி நகரைச் சோ்ந்த ராஜன் மகன் ரவி (50), இவா், வெளிநாட்டில் வேலை ச... மேலும் பார்க்க