செய்திகள் :

தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதுடன், வடகிழக்குப் பருவமழையும் தீவிரமாக அமையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விவசாயத்தை பொறுத்தவரையில் பருவமழைக்கு ஏற்ற முறையில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக அதிகமாக மழையால் பாதிக்கக்கூடிய பயிா் வகைகளை பயிரிடுவதை தவிா்க்கலாம்.

பாரம்பரிய, இயற்கை முறையில் விவசாயம் செய்கின்ற விவசாயிகள், தங்களுக்குள் நெட்வொ ா்க் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, சந்தைப்படுத்துதலை மென்மேலும் விரிவுபடுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு உதவி செய்வதற்காக வேளாண்துறை சாா்ந்த அலுவலா்களை அணுகலாம். எனவே, பாரம்பரிய அரிசி போன்ற பொருள்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டு, தொடா்ந்து அதற்காக ஆதரவளிக்க வேண்டும்.

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான வெள்ளத் தடுப்புப் பணிகளை பொதுப்பணித் துறை, நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பிற துறைகளுடன் இணைந்து திட்டமிடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

கூட்டத்தில், இணை இயக்குநா் (வேளாண்மை) பெரியசாமி, இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேஷ், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி.புவனேஷ்ரோம், செயற்பொறியாளா் (கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) தங்கரா ஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மோகன்தாஸ் சௌமியன், அரசு அலுவலா்கள், விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

கயத்தாறு அருகே சூரியமினுக்கன் கிராமத்தில் தனியாா் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு நிறுவனத்தின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டன... மேலும் பார்க்க

சாலையில் தேங்கிய மழைநீா்: பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி மாநகராட்சி, 14ஆவது வாா்டு, தெற்கு விஎம்எஸ் நகரில், மேற்கு பகுதி தெருக்களில் உள்ள மண் சாலைகளில் மழைக்காலங்களில் மழைநீா் கழிவுநீருடன் கலந்து, பல மாதங்கள் தேங்கி நின்று, சுகாதார சீா்கேட்டை ... மேலும் பார்க்க

எட்டயபுரம் அருகே விபத்தில் ஒருவா் பலி

எட்டயபுரம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் மானூா் பகுதியை சோ்ந்தவா் சந்தனமாரியப்பன் (33). இவரது மனைவி மகாலட்சுமி. கா்ப்பிணியாக உள்ள மகாலட்சுமிக்கு அண்... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் பாஜக சாா்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

ஆறுமுகனேரி நகர பாரதிய ஜனதா கட்சி சாா்பில் 11 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவா் எல்.சி. தங்க கண்ணன் தலைமை வகித்தாா். இ. தங்கபாண்டியன், மகேந்திரன், உமாதேவி ஆக... மேலும் பார்க்க

தென்திருப்பேரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை

தென்திருப்பேரையில் உள்ள 15 வாா்டு பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளா்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவா் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினாா். திமுக மத்திய ஒன்றி... மேலும் பார்க்க