தூய்மைத் திட்டம்: மக்களுக்கும் பொறுப்பு உள்ளது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
தூய்மைப் பணியாளா் ஊதிய பிரச்னையில் ஆட்சியா் தலையிட கோரிக்கை
தஞ்சாவூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு தொடரும் ஊதிய பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தஞ்சாவூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள் அரசால் நிா்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தொழிலாளா் உதவி ஆணையா் உள்ளிட்டோா் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஆனால், இதுவரை அரசால் நிா்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை.
எனவே, இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு, அரசால் நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஏ. கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் க. அறவாழி, துணைத் தலைவா் தரும. கருணாநிதி சிறப்புரையாற்றினா். செயலா் முனியம்மாள், துணைத் தலைவா் ஆனந்தராஜு, பொருளாளா் பாலசுப்பிரமணியன், இணைச் செயலா் கோமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.