செய்திகள் :

தூய்மைப் பணியாளா் ஊதிய பிரச்னையில் ஆட்சியா் தலையிட கோரிக்கை

post image

தஞ்சாவூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு தொடரும் ஊதிய பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தஞ்சாவூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள் அரசால் நிா்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தொழிலாளா் உதவி ஆணையா் உள்ளிட்டோா் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனால், இதுவரை அரசால் நிா்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை.

எனவே, இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு, அரசால் நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஏ. கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் க. அறவாழி, துணைத் தலைவா் தரும. கருணாநிதி சிறப்புரையாற்றினா். செயலா் முனியம்மாள், துணைத் தலைவா் ஆனந்தராஜு, பொருளாளா் பாலசுப்பிரமணியன், இணைச் செயலா் கோமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிப்பட்டு பலத்த காயமடைந்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே அய்யம்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சென்ற சோழன் விரைவு ரயிலில் ஒரு பெ... மேலும் பார்க்க

வாகனத்தில் வைத்த பணம் திருட்டு போலீஸாா் விசாரணை

கும்பகோணத்தில் வங்கி ஏடிஎம்யில் பணம் எடுத்து இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு, தேநீா் சாப்பிட சென்ற போது பணத்தை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஏரகரம... மேலும் பார்க்க

கோடை விடுமுறை முடிந்ததால் பேருந்துகள், ரயில்களில் கூட்டம்

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பேருந்துகள், ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெளிய... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி: 200 போ் பங்கேற்பு

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 200-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தொடங்கப்பட்ட நடப்போம் நலம்... மேலும் பார்க்க

இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் அருகே கூடலூா் குலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் மகன் விஜய் (25). இவரது மாமாவுக்கும், மற்றொரு தரப்... மேலும் பார்க்க

சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டின் சிறப்பான அந்தஸ்தை பெற்ற தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். இந்த நூலகத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க