செய்திகள் :

தென் கொரியா வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

post image

தென் கொரியா நாட்டில், கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின், பல்வேறு இடங்களில் கடந்த ஜூலை 16 முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், அந்நாட்டின் முக்கிய மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் மாயமானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சான்சியோங் மாகாணத்தில் மாயமான 3 பேர் மற்றும் காபியோங் மாகாணத்தில் மாயமான ஒருவர் என மொத்தம் 4 பேரது உடல்கள், தற்போது மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாயமானதாகக் கருதப்பட்ட 9 பேரில், மீதமுள்ள 5 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மோப்ப நாய்கள், அதிநவீன இயந்திரங்கள் ஆகிய பயன்படுத்தி இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை அந்நாட்டு மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

இத்துடன், தென் கொரியாவை புரட்டியெடுத்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 21-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில், அதிகப்படியாக தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், தென் கொரியா ராணுவத்தில் இருந்து சுமார் 2,500 வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முன்னதாக, கனமழை தொடங்கியது முதல் 14,000-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கைவைக்கப்பட்டனர்.

அதில், 11,000-க்கும் அதிகமானோர் தங்களது வசிப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: புதிய போர்! கம்போடியா மீது ஜெட் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசிய தாய்லாந்து!

The death toll from floods and landslides caused by heavy rains in South Korea last week has risen to 23, the country's interior ministry said.

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்... மேலும் பார்க்க

இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!

இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலே... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிமிடையே புராதனக் கோவில் விவகாரத்தால் வியாழக்கிழமை(ஜூலை 24) சண்டை மூண்டு பிற பகுதிகளுக்கும் ... மேலும் பார்க்க

துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!

துருக்கியில், இ3 நாடுகள் (E3) மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று (ஜூலை 25) துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில், இ3 என்றழைக்கப்படும் ஜெர்மனி, பி... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் இனி அரசியல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு!

அரசியல் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் பதிவிட அந்நிறுவனம் தடை விதிக்கவுள்ளது.அமெரிக்காவைs சேர்ந்த மெட்டா நிறுவனம் தங்கள் சமூக ஊடக தளங்களில் (வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன... மேலும் பார்க்க

வியட்நாமில் பேருந்து விபத்து: குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

வியட்நாமில் பேருந்து கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் ஹனோயிலிருந்து டானாங்கிற்கு பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த பேர... மேலும் பார்க்க