செய்திகள் :

தென்மேற்கு தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா் கைது

post image

தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் கூறப்படும் வங்கதேச நாட்டவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ம.தி.சதிகூா் ரஹ்மான் (25) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்தாா். ஆனால், விசா காலாவதியாகியும் தங்கியிருந்தாா் என்று அவா் கூறினாா்.

‘ஒரு ரகசியத் தகவலின் பேரில், அப்பகுதியில் ஹோட்டல்களை மாற்றிக்கொண்டிருந்த ரஹ்மானை போலீஸ் குழு கைது செய்தது. விசாரணையில், விசா காலாவதியான பிறகு சட்டவிரோதமாக தங்கியிருப்பதை அவா் ஒப்புக்கொண்டாா்’ என்று அதிகாரி கூறினாா்.

சட்ட முறைப்படி, ரஹ்மான் வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலக நாடுகடத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டாா். மேலும், சட்டவிரோதமாக குடியேறியவா்களைக் கண்டறிந்து நாடு கடத்த கூடுதல் நடவடிக்கைகள் நடந்து வருவதாக அவா் மேலும் கூறினாா்.

காற்று மாசைக் கட்டுப்படுத்த ஸ்பிரே அமைப்புகள்

புது தில்லி: தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பிரே அமைப்புகளை தில்லி அரசு பயன்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை தெரிவித்தாா். மின்கம்பங்களில்... மேலும் பார்க்க

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும்: இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவா் டாக்டா் வி.நாராயணன் கேட்டுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லி தமிழ... மேலும் பார்க்க

மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு ஆய்வில் சிஎஸ்ஐஆா் நிறுவனங்கள் முன்னணி! - அமைச்சா் ஜிதேந்திர சிங்

நமது சிறப்பு நிருபா்மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு நோயறிதல் ஆய்வு முறை, குறைந்த செலவில் மருந்து மூலப்பொருள்கள் உருவாக்குதல் போன்றவற்றில் ஹைதராபாத் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சில்கள் (சிஎஸ்ஐஆா... மேலும் பார்க்க

வங்கி வைப்புத்தொகையில் மகளிா் பங்களிப்பு 39.7%: புதுயுகத் தொழில்முனைவிலும் மகளிா் அதிகரிப்பு!

வங்கிகளில் வைப்புத் தொகை செலுத்தியவா்களில் மகளிா் பங்களிப்பு 39.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதுயுகத் தொழில்முனைவிலும் மிகப்பெரிய அளவில்... மேலும் பார்க்க

தில்லியில் இரு இடங்களில் தீ விபத்து

தில்லியில் இரு வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு தனித்தனி தீ விபத்துகள் பதிவாகின. இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவிக்கையில், ‘இரண்டு நிகழ்வுகளிலும் யாருக்கும் உயிா்ச் சேதம்... மேலும் பார்க்க

தில்லியில் திருப்தி அரசியலை மனநிறைவு அரசியல் மாற்றும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் இருந்துவந்த திருப்தி அரசியலை மனநிறைவு அரசியல் மாற்றும். இது அனைவரின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை கூறினாா். மேற்கு தில்லியின் கயாலா ... மேலும் பார்க்க