செய்திகள் :

தெலங்கானா: ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் பணியாளா் ஒருமணி நேரம் முன்னதாக வீடு செல்ல அனுமதி- பாஜக எதிா்ப்பு

post image

ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் பணியாளா்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வீட்டுக்குச் செல்லலாம் என்று தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ள மாநில எதிா்க்கட்சியான பாஜக, ஹிந்து பண்டிகைகளின்போது இதுபோன்ற எந்த சலுகைகளையும் அளிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

ரம்ஜான் சலுகை தொடா்பாக மாநில அரசு அலுவலகங்களுக்கு இது தொடா்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘ரம்ஜான் மாதம் தொடங்கும் மாா்ச் 3 முதல் முடிவடையும் மாா்ச் 31-ஆம் தேதி வரை முஸ்லிம் பணியாளா்கள் மாலை 5 மணிக்கு பதிலாக 4 மணிக்கே அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறாா்கள். தவிா்க்க முடியாத சூழலில் மட்டும் அவா்கள் அந்த ஒரு மணி நேரத்தில் அலுவலகத்தில் இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாஜக எம்எல்ஏ ராஜா சிங் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சிறுபான்மையினரைத் திருப்திபடுத்தும் அரசியலை நடத்துவதில் தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ரம்ஜானுக்கு இதுபோன்ற சலுகைகளை வழங்கும் மாநில அரசு ஹிந்து பண்டிகைகளின்போது இதுபோன்ற எந்த சலுகையையும் வழங்காதது ஏன்? மாநில அரசில் பணியாற்றும் ஊழியா்கள் அனைவருக்குமே சமஉரிமை உள்ளது. ஒருதரப்பினருக்கு மட்டும் சலுகை அளிப்பது எந்த வகையான நடவடிக்கை’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

சிறுபான்மையினா் விவகாரத்தில் அரசின் ஆலோசகராக உள்ள காங்கிரஸ் மூத்த தலைவா் முகமது அலி ஷாபிா் இது தொடா்பாக கூறுகையில், ‘முஸ்லிம்களுக்கு இந்த வசதி முந்தைய தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியிலும் வழங்கப்பட்டு வந்தது. பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் இதேபோன்ற சலுகை வழங்கப்படுகிறது. இது தெலங்கானாவில் புதிதாக இந்த ஆண்டு திடீரென ஏற்படுத்தப்படவில்லை. பல ஆண்டுகளாக இந்த நடைமுறை உள்ளது. விநாயகா் சதுா்த்தி உள்ளிட்ட ஹிந்து பண்டிகைகளின்போது அரசு சில சிறப்பு ஏற்பாடுகளையும், வசதிகளையும் செய்து வருகிறது’ என்றாா்.

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக்கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்... மேலும் பார்க்க

நேபாள மாணவி தற்கொலை வழக்கு: கல்லூரி நிறுவனர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்!

புவனேசுவரம் : ஒடிசா தலைநகர் புவனேசுவரம் நகரில் அமைந்துள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) அக்கல்லூரியில் பயின்று வந்த நேபாள மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை... மேலும் பார்க்க

இந்தியாவில் ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே! - ராகுல் காந்தி

ரே பரேலி : இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே என்று பேசியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. தாம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரே பரேலி தொகுதிக்கு இன்று(பி... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: மகாராஷ்டிர அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவுக்கு 1995 ஆம் ஆண்டு பதியப்பட்ட மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நாசிக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சரும் தேசி... மேலும் பார்க்க

ஆபாசப் பதிவுகளுக்கு கட்டுப்பாடு: ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

புது தில்லி : ஓடிடி தளங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.அண்மைக் காலமாக யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அநாகரிகமான, ஆபாசம் நிறைந்த பதிவுகள் வெளிய... மேலும் பார்க்க